ஆன்மிகம்
புனித சலேத் அன்னை ஆலய பெருவிழா: அலங்கார மின்தேர் பவனி
கொடைக்கானலில் புனித சலேத் அன்னை ஆலய பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மின்தேர் பவனி நடைபெற்றது.
கொடைக்கானலில் புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பெருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தினசரி சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. பெருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் இரவு அன்னையின் பெருவிழா திருப்பலி நடந்தது. இதற்கு திரு இருதய ஆண்டவர் ஆலய வட்டார அதிபர் எட்வின் சகாயராஜா தலைமை வகித்தார்.
உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட்குமார், சத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் அந்தோணி பாப்புசாமி கலந்துகொண்டு சிறப்பு திருப்பலியை நிகழ்த்தினார். இதில் முன்னாள் நகரசபை தலைவர்கள் ஸ்ரீதர், முகமது இப்ராகிம், கோவிந்தன், எட்வர்டு உள்பட கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து அன்னையின் அலங்கார மின் தேர்பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் வீதிகள் வழியாக வந்து நேற்று அதிகாலை 6 மணிக்கு மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தை அடைந்தது. தொடர்ந்து அதிகாலை அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் விடுதலை பெருவிழா திருப்பலியினை பேராயர் இல்லத்தை சேர்ந்த ஜான்திரவியம் நிகழ்த்தினார். தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி தேசிய கொடியினை பங்குத்தந்தை பிரிட்டோ ஏற்றி வைத்தார்.
பின்னர் பகல் நேர சப்பர பவனி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் புனித சலேத் அன்னை ஆலயத்தை அடைந்தது. அங்கு நற்கருணையுடன் கொடியிறக்கம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார அதிபர் எட்வின்சகாயராஜா, பங்குத்தந்தையர்கள் டேவிட்குமார், சத்தியநாதன் மற்றும் பங்குத் தந்தையர்கள் செய்திருந்தனர்.
உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட்குமார், சத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் அந்தோணி பாப்புசாமி கலந்துகொண்டு சிறப்பு திருப்பலியை நிகழ்த்தினார். இதில் முன்னாள் நகரசபை தலைவர்கள் ஸ்ரீதர், முகமது இப்ராகிம், கோவிந்தன், எட்வர்டு உள்பட கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து அன்னையின் அலங்கார மின் தேர்பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் வீதிகள் வழியாக வந்து நேற்று அதிகாலை 6 மணிக்கு மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தை அடைந்தது. தொடர்ந்து அதிகாலை அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் விடுதலை பெருவிழா திருப்பலியினை பேராயர் இல்லத்தை சேர்ந்த ஜான்திரவியம் நிகழ்த்தினார். தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி தேசிய கொடியினை பங்குத்தந்தை பிரிட்டோ ஏற்றி வைத்தார்.
பின்னர் பகல் நேர சப்பர பவனி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் புனித சலேத் அன்னை ஆலயத்தை அடைந்தது. அங்கு நற்கருணையுடன் கொடியிறக்கம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார அதிபர் எட்வின்சகாயராஜா, பங்குத்தந்தையர்கள் டேவிட்குமார், சத்தியநாதன் மற்றும் பங்குத் தந்தையர்கள் செய்திருந்தனர்.