ஆன்மிகம்
புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா தொடங்கியது
நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா நேற்று தொடங்கி, வருகிற 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு செபமாலை, இரவு 7 மணிக்கு கொடியேற்றம் போன்றவை நடைபெற்றது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார்.
விழாவில், கோட்டார் மறைமாவட்ட அருட்பணியாளர் அலோசியஸ், பொருளாளர் பென்சிகர், வடக்குகோணம் பங்குதந்தை ரவி காட்சன் கென்னடி மற்றும் குருக்கள், மறவன்குடியிருப்பு ஆலய கட்டிடக்குழு உறுப்பினர்கள், பங்கு பேரவை உறுப்பினர்கள், கன்னியர்கள் மற்றும் திரளான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆயர் நசரேன் சூசைக்கு, ஊர் தலைவர் மில்டன் ஆன்றனி தாமஸ், செயலாளர் ஜாஸ் லிகோரின், துணை செயலாளர் பெல்லா பியாட்றஸ், பொருளாளர் விஜயன், மறவன்குடியிருப்பு ஆலய கட்டிடக்குழு பொருளாளர் ஆன்டனி எட்வின், ஆலய பங்குதந்தை பெஞ்சமின், அன்பிய ஒருங்கிணைப்பு தலைவர் வினோத் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் செபமாலை, ஆராதனை, நற்கருணை ஆசீர், மன்ற ஆண்டுவிழா, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வருகிற 10-ந் தேதி மாலை 6 மணிக்கு செபமாலை, ஆராதனை, இரவு 9.30 மணிக்கு தேர் பவனி போன்றவை நடைபெறும். விழாவின் இறுதி நாளன்று காலை 7.30 மணிக்கு ஆடம்பர திருப்பலி, மதியம் 2 மணிக்கு அன்னையின் தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர்வாதம், கொடியிறக்கம், தொடர்ந்து பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவில், கோட்டார் மறைமாவட்ட அருட்பணியாளர் அலோசியஸ், பொருளாளர் பென்சிகர், வடக்குகோணம் பங்குதந்தை ரவி காட்சன் கென்னடி மற்றும் குருக்கள், மறவன்குடியிருப்பு ஆலய கட்டிடக்குழு உறுப்பினர்கள், பங்கு பேரவை உறுப்பினர்கள், கன்னியர்கள் மற்றும் திரளான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆயர் நசரேன் சூசைக்கு, ஊர் தலைவர் மில்டன் ஆன்றனி தாமஸ், செயலாளர் ஜாஸ் லிகோரின், துணை செயலாளர் பெல்லா பியாட்றஸ், பொருளாளர் விஜயன், மறவன்குடியிருப்பு ஆலய கட்டிடக்குழு பொருளாளர் ஆன்டனி எட்வின், ஆலய பங்குதந்தை பெஞ்சமின், அன்பிய ஒருங்கிணைப்பு தலைவர் வினோத் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் செபமாலை, ஆராதனை, நற்கருணை ஆசீர், மன்ற ஆண்டுவிழா, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வருகிற 10-ந் தேதி மாலை 6 மணிக்கு செபமாலை, ஆராதனை, இரவு 9.30 மணிக்கு தேர் பவனி போன்றவை நடைபெறும். விழாவின் இறுதி நாளன்று காலை 7.30 மணிக்கு ஆடம்பர திருப்பலி, மதியம் 2 மணிக்கு அன்னையின் தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர்வாதம், கொடியிறக்கம், தொடர்ந்து பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.