ஆன்மிகம்
சிதம்பரம் இருதய ஆண்டவர் ஆலய ஆடம்பர தேர் பவனி
சிதம்பரத்தில் நிர்மலா மெட்ரிக் பள்ளி அருகே இருதய ஆண்டவர் ஆலய பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
சிதம்பரத்தில் நிர்மலா மெட்ரிக் பள்ளி அருகே இருதய ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய பெருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்து வந்தது. விழாவில் நேற்று முன்தினம் இரவு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு ஜெபவழிபாடு நடைபெற்றது.
ஆலய பங்கு தந்தை சுந்தர்ராஜன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் இருதய ஆண்டவர் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. கனகசபைநகர், தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி மற்றும் போல்நாராயணன் தெருவழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை இரவு 9.30 மணிக்கு வந்தடைந்தது.
நிகழ்ச்சியில் பங்கு மன்ற செயலாளர் அலெக்சாண்டர், துணைத்தலைவர் ஜெகநாதன், முன்னாள் செயலாளர் ஆரோக்கியசாமி, மோகன், வல்லபதாஸ், சின்னையன், ஸ்டீபன், சாமுவேல் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலய பங்கு தந்தை சுந்தர்ராஜன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் இருதய ஆண்டவர் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. கனகசபைநகர், தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி மற்றும் போல்நாராயணன் தெருவழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை இரவு 9.30 மணிக்கு வந்தடைந்தது.
நிகழ்ச்சியில் பங்கு மன்ற செயலாளர் அலெக்சாண்டர், துணைத்தலைவர் ஜெகநாதன், முன்னாள் செயலாளர் ஆரோக்கியசாமி, மோகன், வல்லபதாஸ், சின்னையன், ஸ்டீபன், சாமுவேல் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.