ஆன்மிகம்
புனித அந்தோணியார் ஆலய மின் அலங்கார தேர்பவனி

புனித அந்தோணியார் ஆலய மின் அலங்கார தேர்பவனி

Published On 2019-07-11 03:55 GMT   |   Update On 2019-07-11 03:55 GMT
காரைக்கால் காமராஜர் சாலையில் புனித அந்தோணியார் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு திருப்பலியும், மின் அலங்கார பெரிய தேர்பவனியும் நடைபெற்றது.
காரைக்கால் காமராஜர் சாலையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்டுத்திருவிழா கடந்த மாதம் (ஜூன்) 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியை, காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலய, துணை பங்குத்தந்தை ஆரோக்கியசகாயராஜ் ஏற்றி வைத்தார். விழாவையொட்டி, தினசரி திருப்பலியும், சிறிய தேர்பவனியும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு, காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதல்வர் அந்தோணிராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலியும், மின் அலங்கார பெரிய தேர்பவனியும், தேவ நற்கருணை ஆசிர் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தேர், ஆலயத்தை சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது. விழாவில், திரளான பங்குமக்கள் கலந்துகொண்டனர். 
Tags:    

Similar News