ஆன்மிகம்

அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

Published On 2019-06-14 03:58 GMT   |   Update On 2019-06-14 03:58 GMT
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 10-ம் நாளான நேற்று தேர்பவனி நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு பாளை மறைமாவட்ட அருட்பணியாளர் டெரன்ஸ் தலைமையில் திருவிழா திருப்பலி காலை 7 மணிக்கு அழகப்பபுரம் அருட்பணியாளர்கள் தலைமையில் திருப்பலி மதியம் 2.30 மணிக்கு தேர்பவனி இரவு 8.30 மணிக்கு நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது. தேர்பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் உதவி பங்குத்தந்தை சர்ச்சில் பங்குபேரவை துணைத்தலைவர் சேவியர் மணி செயலாளர் பாண்டியன் இணை செயலாளர் கீவன் பொருளாளர் செல்லத்துரை மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News