ஆன்மிகம்
சுப்ரமணியபுரம் அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
திருச்சி சுப்ரமணியபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் மாலை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி சுப்ரமணியபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. எடமலைப்பட்டி புதூர் கார்மேல்சபை பாதிரியார் அமல்ராஜ் கொடியேற்றினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. 16-ந் தேதியுடன் விழா நிறைவடைகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பங்குதந்தை மற்றும் பணிக்குழுவினர் செய்துள்ளனர்.
தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. 16-ந் தேதியுடன் விழா நிறைவடைகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பங்குதந்தை மற்றும் பணிக்குழுவினர் செய்துள்ளனர்.