ஆன்மிகம்
பாளையங்கோட்டை செபஸ்தியார் ஆலய திருவிழா
பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகர் அண்ணா தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகர் அண்ணா தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மாலை 6-30 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது
கொடியை சேவியர் கல்லூரி முதல்வர் வின்சென்ட் பிரிட்டோ, பங்குதந்தை ஜேம்ஸ் ஆகியோர் ஏற்றினர். இதைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
3-ந்தேதி மதியம் 12 மணிக்கு அசன விருந்தும், மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியும், 6-30 மணிக்கு சப்பரபவனியும் நடக்கிறது. 4-ந்தேதி மாலை 6 மணிக்கு கல்வெட்டான்குழி பங்குதந்தை அந்தோணிகுரூஸ் தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.
கொடியை சேவியர் கல்லூரி முதல்வர் வின்சென்ட் பிரிட்டோ, பங்குதந்தை ஜேம்ஸ் ஆகியோர் ஏற்றினர். இதைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
3-ந்தேதி மதியம் 12 மணிக்கு அசன விருந்தும், மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியும், 6-30 மணிக்கு சப்பரபவனியும் நடக்கிறது. 4-ந்தேதி மாலை 6 மணிக்கு கல்வெட்டான்குழி பங்குதந்தை அந்தோணிகுரூஸ் தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.