ஆன்மிகம்
கடவுள் தனது அளப்பறிய இரக்கத்தினால் திருமுழுக்குப் பெற்ற பிறகு நாம் செய்யும் பாவங்களுக்கு ஒப்புரவு என்னும் அருள் அடையாளத்தை நிறுவியுள்ளார்.
தவக்கால சிந்தனை: புதிய தொடக்கம்
“உன் குற்றங்களை கார்மேகம் போலும், உன் பாவங்களை பனிப்படலம் போலும் அகற்றி விட்டேன். என்னிடம் திரும்பி் வா, நான் உனக்கு மீட்பளித்து விட்டேன்”(எசா:44:22).
கடவுள் தனது அளப்பறிய இரக்கத்தினால் திருமுழுக்குப் பெற்ற பிறகு நாம் செய்யும் பாவங்களுக்கு ஒப்புரவு என்னும் அருள் அடையாளத்தை நிறுவியுள்ளார். இவ்வருள் அடையாளம் ஒரு உயிர்ப்பு அனுபவம் என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் நாம் இறந்து போயிருந்தோம். இப்போது உயிர்பெற்றுள்ளோம். மீண்டும் கடவுளை நோக்கி நமது புனிதப்பயணம் தொடர்கிறோம். “அவர் இறந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த் தெழுவோம்”(உரோ:6:5).
“பாவத்தில் விழும் வருந்தத்தக்க நிலை ஒரு ஆன்மாவுக்கு ஏற்்பட்டால் வெட்கமும் திகிலும் அடைந்து உடனே தன்னையே தூய்மையாக்கிக் கொள்ள முயற்சி செய்யவேண்டும்” என்கிறார் புனித பிரான்சிஸ் சலேசியார். ஆண்டவரிடம் திரும்பிச் செல்ல காலம் தாழ்த்தாமல், நாட்களை தள்ளிப்போடாமல், இறைவனோடு உறவை புதுப்பித்துக்கொள்ள பாவத்தை அறிக்கை செய்து மன்னிப்பு பெறுவோம்.
ஆண்டவரின் பரிவு எல்லையற்றது. பாவம் என்ற நோயினால் நீண்டநாட்களாக பாதிக்கப்பட்டு அது தொற்றுநோயாக மாறுவதற்கு முன்பே அதன் பாதிப்பிலிருந்து வெளியேற இவ்வருள் அடையாளம் உதவுகிறது. ஒப்புரவு என்னும் அருள் அடையாளம் நாம் கடவுளின் அருளுக்குள் புகவும் கல்வாரியின் கொடையை அதிகப்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. இது ஆன்மாவை சுகப்படுத்துவதற்கும், காயங்களை குணப்படுத்துவதற்கும், பாவவாழ்வை கடந்து மீண்டும் இறைவனின் இல்லம் திரும்புவதற்கும் பயன்படும் மருந்தாகும். இது புதிய வாழ்வை தொடங்குவதற்குரிய வாய்ப்பாகும். இது ஒரு இரண்டாம் திருமுழுக்காகும்.
- அருட்தந்தை. அல்போன்ஸ், பூண்டி.
“உன் குற்றங்களை கார்மேகம் போலும், உன் பாவங்களை பனிப்படலம் போலும் அகற்றி விட்டேன். என்னிடம் திரும்பி் வா, நான் உனக்கு மீட்பளித்து விட்டேன்”(எசா:44:22).
கடவுள் தனது அளப்பறிய இரக்கத்தினால் திருமுழுக்குப் பெற்ற பிறகு நாம் செய்யும் பாவங்களுக்கு ஒப்புரவு என்னும் அருள் அடையாளத்தை நிறுவியுள்ளார். இவ்வருள் அடையாளம் ஒரு உயிர்ப்பு அனுபவம் என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் நாம் இறந்து போயிருந்தோம். இப்போது உயிர்பெற்றுள்ளோம். மீண்டும் கடவுளை நோக்கி நமது புனிதப்பயணம் தொடர்கிறோம். “அவர் இறந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த் தெழுவோம்”(உரோ:6:5).
“பாவத்தில் விழும் வருந்தத்தக்க நிலை ஒரு ஆன்மாவுக்கு ஏற்்பட்டால் வெட்கமும் திகிலும் அடைந்து உடனே தன்னையே தூய்மையாக்கிக் கொள்ள முயற்சி செய்யவேண்டும்” என்கிறார் புனித பிரான்சிஸ் சலேசியார். ஆண்டவரிடம் திரும்பிச் செல்ல காலம் தாழ்த்தாமல், நாட்களை தள்ளிப்போடாமல், இறைவனோடு உறவை புதுப்பித்துக்கொள்ள பாவத்தை அறிக்கை செய்து மன்னிப்பு பெறுவோம்.
ஆண்டவரின் பரிவு எல்லையற்றது. பாவம் என்ற நோயினால் நீண்டநாட்களாக பாதிக்கப்பட்டு அது தொற்றுநோயாக மாறுவதற்கு முன்பே அதன் பாதிப்பிலிருந்து வெளியேற இவ்வருள் அடையாளம் உதவுகிறது. ஒப்புரவு என்னும் அருள் அடையாளம் நாம் கடவுளின் அருளுக்குள் புகவும் கல்வாரியின் கொடையை அதிகப்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. இது ஆன்மாவை சுகப்படுத்துவதற்கும், காயங்களை குணப்படுத்துவதற்கும், பாவவாழ்வை கடந்து மீண்டும் இறைவனின் இல்லம் திரும்புவதற்கும் பயன்படும் மருந்தாகும். இது புதிய வாழ்வை தொடங்குவதற்குரிய வாய்ப்பாகும். இது ஒரு இரண்டாம் திருமுழுக்காகும்.
- அருட்தந்தை. அல்போன்ஸ், பூண்டி.