ஆன்மிகம்
இயேசு சொன்ன உவமைகள் : மனம் தளரா விதவை
சில உவமைகளை இயேசு சொல்லும் போது அது மக்களுக்கு நேரடியாகவும், முழுமையாகவும் புரிய வேண்டும் என விரும்புகிறார். அத்தகைய உவமைகளின் சாராம்சத்தை இயேசுவே சொல்லி விடுகிறார்.
அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.
“ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய்,
‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.
பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.”
பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?
விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்
இயேசு சொல்கின்ற சில உவமைகள் நமக்குப் புரியாமல் விளையாட்டுக் காட்டுவதுண்டு. சில உவமைகள் சிலருக்குப் புரியக் கூடாது என்றே இயேசு நினைப்பதும் உண்டு. உண்மையான மனதோடு இறைவார்த்தையை தேடுபவர்களுக்கு இறைவன் அவற்றை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
சில உவமைகளை இயேசு சொல்லும் போது அது மக்களுக்கு நேரடியாகவும், முழுமையாகவும் புரிய வேண்டும் என விரும்புகிறார். அத்தகைய உவமைகளின் சாராம்சத்தை இயேசுவே சொல்லி விடுகிறார். இதுவும் அத்தகைய ஒரு உவமையே.
இந்த உவமையில் இயேசு ஒரு விதவையைப் பற்றி பேசுகிறார். வேறு எங்கும் உதவிகள் கிடைக்காத, உதவிக்கு வேறு யாரும் இல்லாத ஒரு விதவை. அத்தகைய பலவீனமான மனநிலையில் நாம் இறைவனை நெருங்க வேண்டும். எனக்கு நீதி வழங்க இறைவனால் மட்டுமே முடியும். எனது நிலமையை மாற்றி மீட்பு அளிக்க இறைவனால் மட்டுமே முடியும் எனும் சிந்தனையை நாம் அடிப்படையாய்க் கொண்டிருக்க வேண்டும்.
“ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய்,
‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.
பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.”
பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?
விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்
இயேசு சொல்கின்ற சில உவமைகள் நமக்குப் புரியாமல் விளையாட்டுக் காட்டுவதுண்டு. சில உவமைகள் சிலருக்குப் புரியக் கூடாது என்றே இயேசு நினைப்பதும் உண்டு. உண்மையான மனதோடு இறைவார்த்தையை தேடுபவர்களுக்கு இறைவன் அவற்றை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
சில உவமைகளை இயேசு சொல்லும் போது அது மக்களுக்கு நேரடியாகவும், முழுமையாகவும் புரிய வேண்டும் என விரும்புகிறார். அத்தகைய உவமைகளின் சாராம்சத்தை இயேசுவே சொல்லி விடுகிறார். இதுவும் அத்தகைய ஒரு உவமையே.
இந்த உவமையில் இயேசு ஒரு விதவையைப் பற்றி பேசுகிறார். வேறு எங்கும் உதவிகள் கிடைக்காத, உதவிக்கு வேறு யாரும் இல்லாத ஒரு விதவை. அத்தகைய பலவீனமான மனநிலையில் நாம் இறைவனை நெருங்க வேண்டும். எனக்கு நீதி வழங்க இறைவனால் மட்டுமே முடியும். எனது நிலமையை மாற்றி மீட்பு அளிக்க இறைவனால் மட்டுமே முடியும் எனும் சிந்தனையை நாம் அடிப்படையாய்க் கொண்டிருக்க வேண்டும்.