ஆன்மிகம்
புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா இன்று தொடங்குகிறது
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தல திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
விழாவில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, மாலை 5 மணிக்கு திருக்கொடி பவனி, 6.15 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், புதிய கலையரங்கம் திறப்பு விழா, திருப்பலி, இரவு 9 மணிக்கு அன்பியங்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை திருப்பலி, மாலை ஜெபமாலை ஆகியவை நடைபெறுகிறது.
விழாவில் 10-ந்தேதி காலை 6.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 6.15 மணிக்கு நற்கருணை ஆசிர் ஆகியவை நடக்கிறது.
11-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனி ஆகியவை நடைபெறுகிறது.
12-ந்தேதி காலை 6 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, 8.30 மணிக்கு ஆங்கில திருப்பலி, மாலை 4 மணிக்கு நவநாள் திருப்பலி நடக்கிறது. அதைதொடர்ந்து 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஜெபமாலை, ஆடம்பர ஆராதனையும், இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.
13-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, பகல் 12 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு தேரில் திருப்பலி ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணிப்பேரவை துணைத்தலைவர் கிளாட்சன், செயலாளர் அலெக்சாண்டர் , துணை செயலாளர் ஷைனுஜா, பொருளாளர் ஜார்ஜ் சகாயஜோஸ், பங்குத்தந்தை ரால்ப் கிராண்ட் மதன், இணை பங்குத்தந்தை ஆரோக்கிய ரமேஷ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
விழாவில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, மாலை 5 மணிக்கு திருக்கொடி பவனி, 6.15 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், புதிய கலையரங்கம் திறப்பு விழா, திருப்பலி, இரவு 9 மணிக்கு அன்பியங்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை திருப்பலி, மாலை ஜெபமாலை ஆகியவை நடைபெறுகிறது.
விழாவில் 10-ந்தேதி காலை 6.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 6.15 மணிக்கு நற்கருணை ஆசிர் ஆகியவை நடக்கிறது.
11-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனி ஆகியவை நடைபெறுகிறது.
12-ந்தேதி காலை 6 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, 8.30 மணிக்கு ஆங்கில திருப்பலி, மாலை 4 மணிக்கு நவநாள் திருப்பலி நடக்கிறது. அதைதொடர்ந்து 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஜெபமாலை, ஆடம்பர ஆராதனையும், இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.
13-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, பகல் 12 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு தேரில் திருப்பலி ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணிப்பேரவை துணைத்தலைவர் கிளாட்சன், செயலாளர் அலெக்சாண்டர் , துணை செயலாளர் ஷைனுஜா, பொருளாளர் ஜார்ஜ் சகாயஜோஸ், பங்குத்தந்தை ரால்ப் கிராண்ட் மதன், இணை பங்குத்தந்தை ஆரோக்கிய ரமேஷ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.