ஆன்மிகம்

எண்ணூரில் சூசையப்பர் ஆலய தேர் திருவிழா இன்று மாலை நடக்கிறது

Published On 2018-04-21 03:37 GMT   |   Update On 2018-04-21 03:37 GMT
சென்னை எண்ணூர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தேர் திருவிழா நடைபெற உள்ளது.
சென்னை எண்ணூர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் 57-வது ஆண்டு ஆசீர்வாத பெருவிழா நடந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி கொடியேற்றுத்துடன் திருவிழா நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. தினமும் மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

13-ந்தேதி ஆசிரியர் தினம், 14-ந்தேதி தம்பதியர் தினம், 15-ந்தேதி உபகாரிகள் தினம், 16-ந்தேதி உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. 17-ந்தேதி நலம் நாடுவோர் தினமாக விழா நடந்தது.

18-ந்தேதி தேவ அழைத்தல் தினம் மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை இளையோர் தினத்தை இளைஞர் இயக்கத்தினர் கொண்டினர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நற்கருணை தினம் கொண்டாடப்பட்டது. இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தேர் திருவிழா நடைபெற உள்ளது. நாளை சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன.

அன்று மாலை 6 மணிக்கு கோடி இறக்கத்துடன் விழா நிறைவுபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஆர்.பால்ராஜ் மற்றும் புனித சூசையப்பர் ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர்.
 
Tags:    

Similar News