ஆன்மிகம்
தவக்கால சிந்தனை: வாழ்க்கையை வாழ்வோம்
நாமும் வாழ்க்கையை வாழும் போது நாம் கடவுளிடமிருந்து வந்தவர்கள் என்பதை நம்முடைய நற்செயல்கள் எடுத்துகாட்டுகின்றன.
“என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.” (யோவான் 5:30). கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள உறவு எப்படி பட்டதாக இருக்கிறது? வாழ்க்கையை இருத்தல், பிழைத்தல், வாழ்தல் என்று 3 விதமாக வாழலாம். இருத்தல் என்பது சராசரித்தனமான காரியங்களை செய்து கொண்டு, நம் மனித மாண்பின் மேன்மையை உணராமல் வாழ்ந்து மடிவது.
உதாரணமாக “எப்படி இருக்கிறீர்கள்”? என்று யாராவது கேட்டால், “ஏதோ இருக்கிறோம்” என்று பதில் சொல் கிறோமே அது போன்றது. பிழைத்தல் என்பது முழு ஈடுபாட்டுடன் வாழாமல் ஏதோ “இந்த உலகத்திற்கு வந்துவிட்டோம்” என்று அரைகுறை முயற்சிகளுடன் வாழ்வது. உதாரணமாக எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டால், என்ன பிழைப்பு சார் இது! என்பதை போன்றது.
வாழ்தல் என்பது முழு ஈடுபாட்டுடன் ஒவ்வொரு வினாடியும் முழுமனிதர்களாக வாழ்வது. முழுமனிதர்களாக வாழும் போது முழு ஈடுபாட்டுடன் வாழ்வோம். முழு ஈடுபாட்டுடன் வாழும் போது முழு மகிழ்ச்சியை கண்டுகொள்வோம். அப்பொழுது வாழ்வின் நிறைவை கண்டு கொள்வோம். இத்தகைய வாழ்வு இறைவனிடமிருந்தே வருகிறது.
நாமும் வாழ்க்கையை வாழும் போது நாம் கடவுளிடமிருந்து வந்தவர்கள் என்பதை நம்முடைய நற்செயல்கள் எடுத்துகாட்டுகின்றன. நமது சொல்லும், செயலும், சிந்தனைகளும், நாம் கடவுளிடமிருந்து வந்தவர்கள் என்பதற்கு சான்றாக அமைகின்றனவா? அப்படியென்றால் இந்த கடவுள் கொடுத்த வாழ்க்கையில் இருக்காமல், பிழைக்காமல், வாழ முற்படுவோம். ஏனென்றால் உண்ணுவதும், உறங்குவதும் தான் என்றால் அதை மண்ணும் செய்யும், மரமும் செய்யும். நாம் மனிதர்கள். வாழ பிறந்தவர்கள்.
- ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர், தூய இருதய குருமடம், குடந்தை.
உதாரணமாக “எப்படி இருக்கிறீர்கள்”? என்று யாராவது கேட்டால், “ஏதோ இருக்கிறோம்” என்று பதில் சொல் கிறோமே அது போன்றது. பிழைத்தல் என்பது முழு ஈடுபாட்டுடன் வாழாமல் ஏதோ “இந்த உலகத்திற்கு வந்துவிட்டோம்” என்று அரைகுறை முயற்சிகளுடன் வாழ்வது. உதாரணமாக எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டால், என்ன பிழைப்பு சார் இது! என்பதை போன்றது.
வாழ்தல் என்பது முழு ஈடுபாட்டுடன் ஒவ்வொரு வினாடியும் முழுமனிதர்களாக வாழ்வது. முழுமனிதர்களாக வாழும் போது முழு ஈடுபாட்டுடன் வாழ்வோம். முழு ஈடுபாட்டுடன் வாழும் போது முழு மகிழ்ச்சியை கண்டுகொள்வோம். அப்பொழுது வாழ்வின் நிறைவை கண்டு கொள்வோம். இத்தகைய வாழ்வு இறைவனிடமிருந்தே வருகிறது.
நாமும் வாழ்க்கையை வாழும் போது நாம் கடவுளிடமிருந்து வந்தவர்கள் என்பதை நம்முடைய நற்செயல்கள் எடுத்துகாட்டுகின்றன. நமது சொல்லும், செயலும், சிந்தனைகளும், நாம் கடவுளிடமிருந்து வந்தவர்கள் என்பதற்கு சான்றாக அமைகின்றனவா? அப்படியென்றால் இந்த கடவுள் கொடுத்த வாழ்க்கையில் இருக்காமல், பிழைக்காமல், வாழ முற்படுவோம். ஏனென்றால் உண்ணுவதும், உறங்குவதும் தான் என்றால் அதை மண்ணும் செய்யும், மரமும் செய்யும். நாம் மனிதர்கள். வாழ பிறந்தவர்கள்.
- ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர், தூய இருதய குருமடம், குடந்தை.