ஆன்மிகம்

தவக்கால சிந்தனை: கருணை உருவானவர்

Published On 2018-03-14 09:47 IST   |   Update On 2018-03-14 09:47:00 IST
அன்பு நெஞ்சங்களே! எப்படிப்பட்ட பாவங்களை நாம் செய்திருந்தாலும், கருணையின் கடவுள் நம்மை மன்னிக்க தயாராக உள்ளனர்.
ஒரு பள்ளியில் மாணவன் தினமும் யாருக்கும் தெரியாமல் பள்ளி இடைவேளை நேரத்தில் மறைமுகமாக புகைப்பிடித்து வந்தான். இதை நேரடியாக தலைமை ஆசிரியர் பார்த்த வுடன் அந்த மாணவனை பள்ளியிலிருந்து நீக்கி விட்டார். இந்த நிகழ்வை ஒருமுறை மறைக்கல்வி வகுப்பில் பகிர்ந்துவிட்டு, தலைமை ஆசிரியர் செய்தது சரியா? தவறா? என்று கேட்க, அனைவரும் சரி என்று கூறினர்.

பின்பு ‘இயேசு அந்த தலைமைஆசிரியர் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்’? என்று கேட்டார். ஒரு மாணவன் சத்தமாக சொன்னான். ‘இயேசு அந்த மாணவனை மன்னித்து இனியும் இந்த தவறை செய்யாதே என்று சொல்லியிருப்பார்’ என்று கூறினான். சற்று நேரம் எல்லோரும் பிரமித்து போயினர். ஆம், அன்பு நெஞ்சங்களே! எப்படிப்பட்ட பாவங்களை நாம் செய்திருந்தாலும், கருணையின் கடவுள் நம்மை மன்னிக்க தயாராக உள்ளனர். ஆனால் இப்படிப்பட்ட இந்த இரக்கத்தை, கருணை உள்ளத்தை நாம் பாவம் செய்வதற்கு உரிமமாக பயன்படுத்த கூடாது. எனவே தான் சீராக் புத்தகம் 5:4-ல் கூறப்பட்டிருக்கிறது.

“நான் பாவம் செய்தேன். இருப்பினும் எனக்கு என்ன நேர்ந்துவிட்டது? எனக் கூறாதே. ஆண்டவர் பொறுமை உள்ளவர்”. 5:6 வசனத்தில் “அவரிடம் இரக்கமும் சினமும் உள்ளன”. எனவே, கடவுளின் இரக்கத்தை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி நல்ல மனமாற்றம் பெறுவோம்.

-சுந்தர், கப்புச்சின் சபை, சிவபுரம்.

Similar News