ஆன்மிகம்

பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு: திரளானோர் பங்கேற்பு

Published On 2018-03-10 09:04 IST   |   Update On 2018-03-10 09:04:00 IST
தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது. அப்போது திரளான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவை வழிபட்டனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது.

இங்கு ஒவ்வொரு மாதமும் 8-ந் தேதி புதுமை இரவு வழிபாடு நடைபெறுவது வழக்கம். மார்ச் மாதத்துக்கான புதுமை இரவு வழிபாடு நேற்றுமுன்தினம் நள்ளிரவு நடைபெற்றது.

இதில் பாலக்காடு கிறிஸ்து அரசர் ஆலய பங்கு தந்தை ஆல்பர்ட் தலைமையில் திருப்பலி நடந்தது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் பூண்டி மாதா பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது திரளான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவை வழிபட்டனர். நிகழ்ச்சியில் பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், ஆலயத்தின் தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தைகள் அமலதாஸ், எடிசன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News