ஆன்மிகம்
இறைவன் எங்கு இருக்கிறார் என கேள்வி கேட்டு அலையாது, நம்மோடு, நம் சகோதர சகோதரிகளோடு, அண்டை வீட்டு மனிதர்களோடு உடன் இருக்கின்றார் என்பதனை கண்டு கொள்வோம்.
ஒரு இளைஞனுக்கு இந்த உலகமே மாபெரும் துன்பகர அனுபவமாக தென்பட்டது. எப்படியாவது இன்பத்தையும், மகிழ்வையும் கண்டுபிடித்து விடவேண்டும் என ஆசைப்பட்டான். என்ன செய்வது, யாரிடம் ஆலோசனை கேட்பது என்பதெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. காட்டில் வாழும் முனிவர்களிடம் சென்று ஆலோசனை கேட்கலாம் என முடிவெடுத்து காட்டை நோக்கி பயணமானான். முனிவரை சந்தித்து ஆலோசனை கேட்டான். அவர் பின்வரும் நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.
காலணிகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் அரசன் ஒருவன் வேட்டையாட காட்டுக்கு சென்றான். அரசனுக்கு காலில் முள் தைத்து விட்டது. உடனே அமைச்சரை அழைத்து பாதை மோசமாக இருப்பதால், நாடு முழுவதும் மாட்டுத்தோலில் கம்பளம் விரிக்கும்படி ஆணையிட்டான். அதைப்பார்த்த துறவி, மன்னரை அணுகி ஏன் வீண் செலவு? உன் கால்களைக் காக்க இரண்டு மாட்டுத்தோல் போதுமே என்றார். அரசன் உத்தரவால் மிதியடி உருவானது.
நிகழ்வினை கேட்டுக்கொண்டிருந்த இளைஞன், இந்நிகழ்வுக்கும் என் கேள்விக்கும் என்ன தொடர்பு என்றான்? அதற்கு முனிவர் உலகம் மகிழ்வானதாக மாற வேண்டுமெனில், உன் உள்ளம் மகிழ்வாக மாற வேண்டும், என்றார்.
இறைமகன் இயேசுவின் சீடர்கள், அவரின் துன்பங்களையும், பாடுகளையும் முழுமையாக அறிந்து கொண்டதால் தான், அர்த்தமிக்க சீடத்துவ வாழ்வு வாழ்ந்தனர். தம்மையே முழுமையாய் இறைவனுக்கு கையளித்தனர். பலரின் வாழ்வுத்தரம் உயர மாபெரும் தூண்டுகோலால் திகழ்ந்தனர். ஆதலால் நாமும், நமது வாழ்வை இறைவனுக்கு உகந்ததாய் மாற்ற, முழுதாய் அர்ப்பணிக்க முயற்சி செய்வோம். எவையெவை என் வாழ்வின் மகிழ்ச்சிக்கு தடையாய் இருக்கின்றது என்பதை கண்டுபிடிப்போம்.
இறைவனோடு இணைந்திருப்பதில் முழுமையான ஆனந்தம் மறைந்திருக்கிறது. இறைவன் எங்கு இருக்கிறார் என கேள்வி கேட்டு அலையாது, நம்மோடு, நம் சகோதர சகோதரிகளோடு, அண்டை வீட்டு மனிதர்களோடு உடன் இருக்கின்றார் என்பதனை கண்டு கொள்வோம். தவக்காலத்தின் சிறப்பே உடல் ஒறுத்தல் செய்வதில் தான் முழுமை பெறுகின்றது.
எவையெவை எனக்கு ஆடம்பரங்களை உருவாக்கிக் கொடுக்கின்றது? எவையெவை என் வாழ்வின் லட்சிய பயணத்துக்கு தடையை உருவாக்குகின்றது? என்பதையெல்லாம் கண்டுபிடிப்போம். தன்னை அர்ப்பணித்து வாழ்வதற்கு இறைமகன் இயேசு கிறிஸ்து தெருவோர வாழ்வுச்சூழலை தெரிவு செய்து கொண்டார். தனக்கென சொந்தமும், சுற்றமும் இல்லாது சிலுவையில் உயிர் விட்டார். இத்தகைய உயரிய வாழ்வுச்சூழலை நினைத்து இறைவழியில் நடக்க, நாம் முயற்சி எடுக்க வேண்டும்.
உறவின்றி மனித வாழ்வுக்கு அர்த்தமில்லை. முழுமையுமில்லை என்பதனை அறிந்த நாம், நம்மால் முடிந்த அளவுக்கு கைவிடப்பட்டவர்களைத்தேடிச் செல்வோம். வீதியோரங்களிலும், சாலை ஓரங்களிலும் உறங்குகின்ற மனிதர்களுக்கு காவலாய் இருப்போம். அவர்களுக்கு முகவரியமைத்து கொடுக்க தகுந்த வழியினை கண்டுபிடிப்போம். பொன்னையும், பொருளையும் கொடுப்பதை விட உயர்ந்தது நமது நேரங்களையும், ஆற்றல்களையும் செலவழிப்பதாகும். அதிலேதான் உண்மையான அர்ப்பணம் மறைந்து இருக்கின்றது என்ற பேருண்மையை கற்றுக்கொள்வோம். நல்வார்த்தைகளை, நற்சிந்தனைகளை நாளுக்கு நாள் விதைத்துக் கொண்டு தொடர்ந்து வளர்வோம்
-அருட்பணி. குருசு கார்மல்,
இணை பங்குத்தந்தை, தூய சவேரியார்
பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
காலணிகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் அரசன் ஒருவன் வேட்டையாட காட்டுக்கு சென்றான். அரசனுக்கு காலில் முள் தைத்து விட்டது. உடனே அமைச்சரை அழைத்து பாதை மோசமாக இருப்பதால், நாடு முழுவதும் மாட்டுத்தோலில் கம்பளம் விரிக்கும்படி ஆணையிட்டான். அதைப்பார்த்த துறவி, மன்னரை அணுகி ஏன் வீண் செலவு? உன் கால்களைக் காக்க இரண்டு மாட்டுத்தோல் போதுமே என்றார். அரசன் உத்தரவால் மிதியடி உருவானது.
நிகழ்வினை கேட்டுக்கொண்டிருந்த இளைஞன், இந்நிகழ்வுக்கும் என் கேள்விக்கும் என்ன தொடர்பு என்றான்? அதற்கு முனிவர் உலகம் மகிழ்வானதாக மாற வேண்டுமெனில், உன் உள்ளம் மகிழ்வாக மாற வேண்டும், என்றார்.
இறைமகன் இயேசுவின் சீடர்கள், அவரின் துன்பங்களையும், பாடுகளையும் முழுமையாக அறிந்து கொண்டதால் தான், அர்த்தமிக்க சீடத்துவ வாழ்வு வாழ்ந்தனர். தம்மையே முழுமையாய் இறைவனுக்கு கையளித்தனர். பலரின் வாழ்வுத்தரம் உயர மாபெரும் தூண்டுகோலால் திகழ்ந்தனர். ஆதலால் நாமும், நமது வாழ்வை இறைவனுக்கு உகந்ததாய் மாற்ற, முழுதாய் அர்ப்பணிக்க முயற்சி செய்வோம். எவையெவை என் வாழ்வின் மகிழ்ச்சிக்கு தடையாய் இருக்கின்றது என்பதை கண்டுபிடிப்போம்.
இறைவனோடு இணைந்திருப்பதில் முழுமையான ஆனந்தம் மறைந்திருக்கிறது. இறைவன் எங்கு இருக்கிறார் என கேள்வி கேட்டு அலையாது, நம்மோடு, நம் சகோதர சகோதரிகளோடு, அண்டை வீட்டு மனிதர்களோடு உடன் இருக்கின்றார் என்பதனை கண்டு கொள்வோம். தவக்காலத்தின் சிறப்பே உடல் ஒறுத்தல் செய்வதில் தான் முழுமை பெறுகின்றது.
எவையெவை எனக்கு ஆடம்பரங்களை உருவாக்கிக் கொடுக்கின்றது? எவையெவை என் வாழ்வின் லட்சிய பயணத்துக்கு தடையை உருவாக்குகின்றது? என்பதையெல்லாம் கண்டுபிடிப்போம். தன்னை அர்ப்பணித்து வாழ்வதற்கு இறைமகன் இயேசு கிறிஸ்து தெருவோர வாழ்வுச்சூழலை தெரிவு செய்து கொண்டார். தனக்கென சொந்தமும், சுற்றமும் இல்லாது சிலுவையில் உயிர் விட்டார். இத்தகைய உயரிய வாழ்வுச்சூழலை நினைத்து இறைவழியில் நடக்க, நாம் முயற்சி எடுக்க வேண்டும்.
உறவின்றி மனித வாழ்வுக்கு அர்த்தமில்லை. முழுமையுமில்லை என்பதனை அறிந்த நாம், நம்மால் முடிந்த அளவுக்கு கைவிடப்பட்டவர்களைத்தேடிச் செல்வோம். வீதியோரங்களிலும், சாலை ஓரங்களிலும் உறங்குகின்ற மனிதர்களுக்கு காவலாய் இருப்போம். அவர்களுக்கு முகவரியமைத்து கொடுக்க தகுந்த வழியினை கண்டுபிடிப்போம். பொன்னையும், பொருளையும் கொடுப்பதை விட உயர்ந்தது நமது நேரங்களையும், ஆற்றல்களையும் செலவழிப்பதாகும். அதிலேதான் உண்மையான அர்ப்பணம் மறைந்து இருக்கின்றது என்ற பேருண்மையை கற்றுக்கொள்வோம். நல்வார்த்தைகளை, நற்சிந்தனைகளை நாளுக்கு நாள் விதைத்துக் கொண்டு தொடர்ந்து வளர்வோம்
-அருட்பணி. குருசு கார்மல்,
இணை பங்குத்தந்தை, தூய சவேரியார்
பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.