ஆன்மிகம்

நமக்காக மரித்த ஏசு

Published On 2018-02-18 09:21 IST   |   Update On 2018-02-18 09:21:00 IST
தவக்காலத்தில் ஏசுவின் பாடு மரணத்தை தினமும் தியானிக்கிற வேலையில் ஏசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு மனிதனாக வந்து ரத்தத்தை சிந்தி மரிப்பதற்கான உரிய காரணங்களைப் பார்ப்போம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இந்த தவக்காலத்தில் ஏசுவின் பாடு மரணத்தை தினமும் தியானிக்கிற வேலையில் ஏசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு மனிதனாக வந்து ரத்தத்தை சிந்தி மரிப்பதற்கான உரிய காரணங்களைப் பார்ப்போம்.

யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன், நல்லமேய்ப் பன் ஆடுகளுக்காகத்தன் ஜீவனைக்கொடுக்கிறார். ஏசாயா 53:6-ல் கூறப்பட்டபடி நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பி திரிந்து அவனவன் தன்தன் வழியிலே போனோம். கர்த்தரே நம் எல்லோருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழச்செய்தார். நாம் பாதுகாக்கப்பட அவர் மரித்தார்.

ஏசாயா 53:12 அநேகருடைய பாவத்தையும் தாமே சுமந்து ஏற்றுக்கொண்டு ரத்தம் சிந்தினார். எபிரேயர் 9:22-ம் வசனத்தின்படி ரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது நமக்கு பாவமன்னிப்பு உண்டாக அவர் நம்முடைய பாவத்தை ஏற்றுக்கொண்டு மரித்தார்.

யோவான் 11:52 தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறப்படவும் சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகள் ஒன்று சேரவும் மரித்தார். ஜனங்கள் எல்லோரும் கெட்டுப்போகாதபடிக்கு ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று தீர்க்க தரிசனமாய் கூறினார்கள். பல தீர்க்கதரிசனங்களாய் சொல்லப்பட்டது நிறைவேறும்படியாய் மரித்தார்.

எபிரேயர் 2:14 மரணத்திற்கு அதிகாரியான பிசாசை தமது மரணத்தினால் அழிக்கும்படிக்கு சிலுவையில் மரித்தார்.லூக்கா 23:12 பகையாக இருந்த இரண்டுபேர் ஒன்று சேர்ந்து சமாதானமாய் நாட்டை ஆள அவர் மரித்தார்.

ஏசாயா 53:5-ம் வசனத்தின்படி நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. இன்றைக்கு இதை வாசிக்கும் உங்களுக்கும் சமாதானத்தையும், மன்னிப்பை யும், அன்பையும், ஆசீர்வாதத்தையும், பாதுகாப்பையும், பாவத்திலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து விடுதலையும் தர வல்லமையுள்ளவர்.

- பாஸ்டர். ஏ. ஏசையன்.

Similar News