ஆன்மிகம்
இஸ்லாமிய ஷரீஅத் சட்டதிட்டம் என்பது வணக்க வழிபாடு, கொடுக்கல்-வாங்கல், வியாபாரம், குடும்ப விவகாரம், மார்க்கக்குற்றம், மனிதக்குற்றம் என அனைத்துக்குமான சட்ட திட்டங்களை உள்ளடக்கிய ஒன்றாகும்.
மனிதன் மனிதனாக வாழ அவனுக்கு சில சட்ட திட்டங்கள் அவசியமாய் தேவைப்படுகின்றன. மனிதனால், சட்டம் என்ற கடிவாளம் இன்றி சுய கட்டுப்பாட்டுடன் வாழ்வது மிக கடினமே. இது போன்ற சூழ்நிலையில் தான் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின் அவசியம் கட்டாயம் தேவைப்படுகின்றன.
ஷரீஅத் சட்டம் என்பது சர்வ தேசத்திலும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்று கூடி உருவாக்கிய சட்டத் தொகுப்பல்ல. இறைவனால் ‘வஹி’ எனும் இறை அறிவிப்பின் வழியாக அவனது திருத்தூதருக்கு அவ்வப்போது அருளப்பட்டு விதிக்கப்பட்ட ஒரு சட்டத்தொகுப்பு தான் ஷரீஅத் சட்டமாகும்.
இதுகுறித்த திருக்குர்ஆன் வசனம் வருமாறு:-
‘(நபியே) மார்க்கத்தின் நேரான ஒரு (ஷரீஅத்தின்) வழியில் தான் நாம் உங்களை ஆக்கியிருக்கின்றோம். ஆகவே, அதனையே நீங்கள் பின் பற்றி நடப்பீராக. கல்வி ஞானமற்ற இந்த மக்களின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்’ (45:18).
ஷரீஅத் சட்டங்கள் தெளிவாக, துல்லியமாக, சமநிலையுடன் இருக்கின்றன. இதில் ஏற்றத்தாழ்வு, பாரபட்சம் என்று எவ்விதக் குளறுபடிகளும் இல்லை.
‘என் பாச மகள் பாத்திமா திருடினாலும் அவரது கை நிச்சயம் வெட்டப்படும்’ என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
‘எனக்குப் பின் நபி மூசா (அலை) அவர்கள் வந்தாலும், அவர் எனது ஷரீஅத்தைத்தான் பின்பற்ற வேண்டும். இறுதி காலத்தில் தோன்றும் நபி ஈசா (அலை) எனது ஷரீஅத்தைத் தான் பின்பற்றுவார்’ என்ற நபி மொழிகள் எல்லாம் இந்த இறுதி ஷரீஅத் வழி தான் நிலையானது; அது நிறைவானது; நிரந்தரமானது என்பதையே அறிவிக்கின்றது.
திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள சட்டங்கள் குறித்த விவரங்கள் வருமாறு:-
‘(நபியே) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்தவைகளைக் கொண்டு மனிதர்களுக்கிடையில் நீங்கள் சட்டப்படி தீர்ப்பளிப்பதற்காக, முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நாமே உங்கள் மீது இறக்கியிருக்கின்றோம்’ (4:105).
‘எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டு சட்டப்படி தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே’ (5:44).
‘எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டு சட்டப்படி தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள் தான்’ (5:45).
‘எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டு சட்டப்படி தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள் தான்’ (5:47).
“(நபியே, முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ் வேதத்தையும் நாமே உங்கள்மீது அருளினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி, அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. ஆகவே (நபியே) நீங்கள் அல்லாஹ் (உங்களுக்கு) அருளிய இதனைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியுங்கள்.
உங்களுக்கு வந்த உண்மையைப் புறக்கணித்து விட்டு அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழியையும் நாமே ஏற்படுத்தினோம். அல்லாஹ் விரும்பினால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) வகுப்பாக ஆக்கியிருக்க முடியும். எனினும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளில் (நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று) உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கின்றான்). ஆகவே, (இவைகளில்) மேலான (இஸ்லாமிய) வழியின் பக்கம் விரைந்து செல்லுங்கள். அல்லாஹ்வின் பக்கம் தான் நீங்கள் அனைவரும் செல்ல வேண்டியதிருக்கின்றது. நீங்கள் எதில் (அபிப்பிராய பேதப்பட்டுத்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களோ அதனை அவன் உங்களுக்கு நன்கு அறிவித்து விடுவான்”. (5:48)
‘(நபியே) அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டே நீங்கள் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளியுங்கள். நீங்கள் அவர்களுடைய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள். அன்றி உங்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்தவற்றில் எதிலிருந்தும் உங்களை அவர்கள் திருப்பி விடாதபடியும் நீங்கள் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள். (5:49)
‘அறியாமைக்காலத்தின் சட்ட(திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, உறுதிகொண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?’ (5:50)
மேற்கண்ட இறைவசனங்கள் அனைத்தும் இறைச்சட்டமான ஷரீஅத் சட்டப்படி தான் எந்தவொரு தீர்ப்பும் வழங்கப்பட வேண்டும். அவற்றில் நீங்கள் மிகக்கவனமாக இருங்கள், திருவேதத்தை விட்டும் நீங்கள் திசை திரும்பி விடாதீர்கள் என்று பன்முறை நம்மை எச்சரிக்கிறது.
அவற்றை மதித்து நடப்பதும், மறுத்து நடப்பதும் நம் கை களில் தான் இருக்கிறது. நமக்கு சாதகமான சட்டங்களை எடுப்பதும், நமக்கு பாதகமான சட்டங்களை தடுப்பதும் எந்தவகை நியாயம் என்று தெரியவில்லை.
ஷரீஅத் சட்டம் என்று வந்துவிட்டால் அதன் முன்அனைவரும் சமம். அதில் ஏற்றத்தாழ்வு என்பது அறவேயில்லை. ஏனெனில் இறை வசனம் ஒன்று நம்மைப் பார்த்து இப்படிக் கேட்கிறது:
‘(சட்டப்படி) தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?’ (95:8)
இஸ்லாமிய ஷரீஅத் சட்டதிட்டம் என்பது வணக்க வழிபாடு, கொடுக்கல்-வாங்கல், வியாபாரம், குடும்ப விவகாரம், மார்க்கக்குற்றம், மனிதக்குற்றம் என அனைத்துக்குமான சட்ட திட்டங்களை உள்ளடக்கிய ஒன்றாகும்.
ஒருவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான முழுச்சட்ட திட்டங்களும் ஷரீஅத்தில் உண்டு. எனவே தான் நமது ஷரீஅத் சட்ட திட்டங்களில் யாருடைய தலையீடும் இருப்பதில்லை. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பது நம் ஷரீஅத் சட்டதிட்டத்திற்கும் நன்கு பொருந்தும்.
நிறைவான இறை சட்டங்களை போற்றுவோம், அதன்படி நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம்.
மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி, ஈரோடு-3
ஷரீஅத் சட்டம் என்பது சர்வ தேசத்திலும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்று கூடி உருவாக்கிய சட்டத் தொகுப்பல்ல. இறைவனால் ‘வஹி’ எனும் இறை அறிவிப்பின் வழியாக அவனது திருத்தூதருக்கு அவ்வப்போது அருளப்பட்டு விதிக்கப்பட்ட ஒரு சட்டத்தொகுப்பு தான் ஷரீஅத் சட்டமாகும்.
இதுகுறித்த திருக்குர்ஆன் வசனம் வருமாறு:-
‘(நபியே) மார்க்கத்தின் நேரான ஒரு (ஷரீஅத்தின்) வழியில் தான் நாம் உங்களை ஆக்கியிருக்கின்றோம். ஆகவே, அதனையே நீங்கள் பின் பற்றி நடப்பீராக. கல்வி ஞானமற்ற இந்த மக்களின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்’ (45:18).
ஷரீஅத் சட்டங்கள் தெளிவாக, துல்லியமாக, சமநிலையுடன் இருக்கின்றன. இதில் ஏற்றத்தாழ்வு, பாரபட்சம் என்று எவ்விதக் குளறுபடிகளும் இல்லை.
‘என் பாச மகள் பாத்திமா திருடினாலும் அவரது கை நிச்சயம் வெட்டப்படும்’ என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
‘எனக்குப் பின் நபி மூசா (அலை) அவர்கள் வந்தாலும், அவர் எனது ஷரீஅத்தைத்தான் பின்பற்ற வேண்டும். இறுதி காலத்தில் தோன்றும் நபி ஈசா (அலை) எனது ஷரீஅத்தைத் தான் பின்பற்றுவார்’ என்ற நபி மொழிகள் எல்லாம் இந்த இறுதி ஷரீஅத் வழி தான் நிலையானது; அது நிறைவானது; நிரந்தரமானது என்பதையே அறிவிக்கின்றது.
திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள சட்டங்கள் குறித்த விவரங்கள் வருமாறு:-
‘(நபியே) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்தவைகளைக் கொண்டு மனிதர்களுக்கிடையில் நீங்கள் சட்டப்படி தீர்ப்பளிப்பதற்காக, முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நாமே உங்கள் மீது இறக்கியிருக்கின்றோம்’ (4:105).
‘எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டு சட்டப்படி தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே’ (5:44).
‘எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டு சட்டப்படி தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள் தான்’ (5:45).
‘எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டு சட்டப்படி தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள் தான்’ (5:47).
“(நபியே, முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ் வேதத்தையும் நாமே உங்கள்மீது அருளினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி, அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. ஆகவே (நபியே) நீங்கள் அல்லாஹ் (உங்களுக்கு) அருளிய இதனைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியுங்கள்.
உங்களுக்கு வந்த உண்மையைப் புறக்கணித்து விட்டு அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழியையும் நாமே ஏற்படுத்தினோம். அல்லாஹ் விரும்பினால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) வகுப்பாக ஆக்கியிருக்க முடியும். எனினும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளில் (நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று) உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கின்றான்). ஆகவே, (இவைகளில்) மேலான (இஸ்லாமிய) வழியின் பக்கம் விரைந்து செல்லுங்கள். அல்லாஹ்வின் பக்கம் தான் நீங்கள் அனைவரும் செல்ல வேண்டியதிருக்கின்றது. நீங்கள் எதில் (அபிப்பிராய பேதப்பட்டுத்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களோ அதனை அவன் உங்களுக்கு நன்கு அறிவித்து விடுவான்”. (5:48)
‘(நபியே) அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டே நீங்கள் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளியுங்கள். நீங்கள் அவர்களுடைய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள். அன்றி உங்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்தவற்றில் எதிலிருந்தும் உங்களை அவர்கள் திருப்பி விடாதபடியும் நீங்கள் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள். (5:49)
‘அறியாமைக்காலத்தின் சட்ட(திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, உறுதிகொண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?’ (5:50)
மேற்கண்ட இறைவசனங்கள் அனைத்தும் இறைச்சட்டமான ஷரீஅத் சட்டப்படி தான் எந்தவொரு தீர்ப்பும் வழங்கப்பட வேண்டும். அவற்றில் நீங்கள் மிகக்கவனமாக இருங்கள், திருவேதத்தை விட்டும் நீங்கள் திசை திரும்பி விடாதீர்கள் என்று பன்முறை நம்மை எச்சரிக்கிறது.
அவற்றை மதித்து நடப்பதும், மறுத்து நடப்பதும் நம் கை களில் தான் இருக்கிறது. நமக்கு சாதகமான சட்டங்களை எடுப்பதும், நமக்கு பாதகமான சட்டங்களை தடுப்பதும் எந்தவகை நியாயம் என்று தெரியவில்லை.
ஷரீஅத் சட்டம் என்று வந்துவிட்டால் அதன் முன்அனைவரும் சமம். அதில் ஏற்றத்தாழ்வு என்பது அறவேயில்லை. ஏனெனில் இறை வசனம் ஒன்று நம்மைப் பார்த்து இப்படிக் கேட்கிறது:
‘(சட்டப்படி) தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?’ (95:8)
இஸ்லாமிய ஷரீஅத் சட்டதிட்டம் என்பது வணக்க வழிபாடு, கொடுக்கல்-வாங்கல், வியாபாரம், குடும்ப விவகாரம், மார்க்கக்குற்றம், மனிதக்குற்றம் என அனைத்துக்குமான சட்ட திட்டங்களை உள்ளடக்கிய ஒன்றாகும்.
ஒருவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான முழுச்சட்ட திட்டங்களும் ஷரீஅத்தில் உண்டு. எனவே தான் நமது ஷரீஅத் சட்ட திட்டங்களில் யாருடைய தலையீடும் இருப்பதில்லை. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பது நம் ஷரீஅத் சட்டதிட்டத்திற்கும் நன்கு பொருந்தும்.
நிறைவான இறை சட்டங்களை போற்றுவோம், அதன்படி நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம்.
மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி, ஈரோடு-3