ஆன்மிகம்
தனது பாவங்களுக்குப் பலியாகத் தான் இறைமகன் இயேசு உயிர்விட்டார் எனும் சிந்தனையை மனதில் இருத்தி, தன் பாவ வாழ்க்கையை விட்டு மனம் திரும்பும் காலம்.
கிறிஸ்தவர்களின் புனித நாட்கள் என்னென்ன என ஒரு கேள்வி எழுப்பினால் சட்டென நினைவுக்கு வரக்கூடிய நாட்கள் இரண்டு. ஒன்று, கிறிஸ்து பிறப்பு, இன்னொன்று ஈஸ்டர். ஒன்று இறைமகன் இயேசு விண்ணிலிருந்து மனிதனாக மண்ணில் பிறந்த தினம். இரண்டாவது மனிதனாய் வந்த இறைவன் கொல்லப்பட்டு மீண்டும் விண்ணுக்காய் உயிர்த்த தினம்.
அதென்ன தவக்காலம்?
ஈஸ்டர் தினத்துக்கு முன்பு வருகின்ற, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்த, நாற்பது நாட்களைக் கிறிஸ்தவர்கள் ‘தவக்காலம்’ என அழைக்கின்றனர். அந்த தவ நாட்களின் தொடக்கம் ஒரு புதன் கிழமையில் ஆரம்பமாகும். அந்த நாள் தான் ‘சாம்பல் புதன்’. அதாவது தவத்தின் தொடக்கப் புள்ளி அந்த நாள் தான்.
‘லெந்து காலம்’ என்றும் ‘தவக்காலம்’ என்றும் அழைக்கப்படுகின்ற இந்த காலம் மனம் திரும்புதலின் காலம். தனது பாவங்களுக்குப் பலியாகத் தான் இறைமகன் இயேசு உயிர்விட்டார் எனும் சிந்தனையை மனதில் இருத்தி, தன் பாவ வாழ்க்கையை விட்டு மனம் திரும்பும் காலம்.
‘மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய்’ எனும் இறைவார்த்தையே தவக்காலத்தின் மையம். மண்ணிலிருந்து இறைவன் ஆதாமைப் படைத்தார். மனித குலம் அங்கிருந்து ஆரம்பமானது. மனிதனின் வாழ்க்கை இறுதியில் மண்ணோடு தான் கரைந்து முடிகிறது. எனில் ஆன்மா இறைவனோடு இளைப்பாற வேண்டும். அதற்கு நம் முடைய வாழ்க்கை இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கையாய் அமைய வேண்டும். இதுவே தவக்காலத்தின் அடிப்படைச் சிந்தனை.
அது ஏன் நாற்பது நாட்கள்?
நாற்பது என்பது விவிலியத்தில் மிக முக்கியமான எண். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் மக்களின் விடுதலை நாயகனாக இருந்தவர் மோசே. அவர், ஆரம்ப நாட்களில் எகிப்தியன் ஒருவனை அடித்துக் கொன்றார். அதன் பின் அந்த நாட்டை விட்டே பயந்து ஓடினார். மீதியானி எனுமிடத்தில் அவர் மறைந்து வாழ்ந்த ஆண்டுகள் நாற்பது.
பத்து கட்டளைகள் பழைய ஏற்பாட்டின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. இறைவன் அதை சீனாய் மலையில் வைத்து மோசேக்கு வழங்கினார். அதற்காக சீனாய் மலையிலே மோசே கடவுளோடு இருந்த நாட்கள் நாற்பது. எகிப்திலிருந்து அழைத்து வந்த இஸ்ரவேல் மக்கள் பாலை நிலைத்தில் அலைந்து திரிந்த வருடங்கள் நாற்பது. அந்த மோசே எழுதிய விடுதலைப்பயணம் பிற்காலத்தில் நாற்பது அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டதும் இறை சித்தமன்றி வேறில்லை. இறைமகன் இயேசு நேரடியாக உண்ணா நோன்பு இருந்து தந்தையாம் இறைவனோடு ஒன்றித்திருந்த நாட்கள் நாற்பது. இப்படி நாற்பது என்பதன் முக்கியத்துவம் விவிலியம் முழுவதும் தொடர்கிறது. அதுவே இந்த தவக்காலத்திலும் நீள்கிறது.
கி.பி. 900-ம் ஆண்டு முதல் இந்த சாம்பல் புதன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அது ஏன் சாம்பல்?
சாம்பல் என்பது எல்லோராலும் நிராகரிக்கப்படும் ஒரு பொருள். உதாசீனத்தின் அடையாளம். பழைய ஏற்பாட்டில் இறைவனிடம் மன்னிப்பு வேண்டும் மக்களும், மன்னர்களும் கோணியை ஆடையாய் உடுத்திக் கொண்டு, சாம்பலில் அமர்ந்து நோன்பு இருப்பார்கள். தங்கள் உடலெல்லாம் சாம்பல் பூசி, இறைவன் முன்னால் தாங்கள் வெறும் சாம்பல் போன்றவர்கள் என குறிப்பால் உணர்த்துவார்கள். தன்னை வெறுமையாக்கி, இறைவனை மட்டுமே மகிமைப்படுத்தும் நிகழ்வு அது.
அதன் அடிப்படையில் தவக்காலத்தின் தொடக்க நாளான புதன் கிழமையில் நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளம் இடும் வழக்கம் பெரும்பாலான கிறிஸ்தவர்களிடையே உண்டு. நெற்றியில் இடும் சிலுவை, வெற்றி தந்த இயேசுவின் சிலுவையை நினைவு கூரும் அடையாளம். இனி அவரது வாழ்க்கையை எனக்குள் சுமப்பேன் என்பதன் உறுதி மொழி.
ஏன் நோன்பு?
நோன்பு என்பது ஒறுத்தலின் அடையாளம். தியாகத்தின் வெளிப்பாடு. ஆடம்பரங்கள், சிற்றின்பங்கள் தவிர்த்து இறைவனோடு இணைந்திருப்பதே நோன்பின் அடிப்படை.
நோன்பு இருக்கும் போது பிறருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்றார் இயேசு. நோன்பு என்பது விளம்பரத்துக்கான விஷயமல்ல, அது இறைவனோடான தொடர்பின் அடையாளம். இந்த நோன்பை பெருமைக்காகவும், பெயருக்காகவும், கண் துடைப்புக்காகவும் செய்யாமல் உண்மை அன்போடு செய்ய வேண்டும்.
எதற்காக நெற்றியில்?
நெற்றி என்பது மனிதனுடைய முழுமையைக் குறிப்பதாக விவிலியம் கோடிட்டுக் காட்டு கிறது.
‘நிலத்தின் புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல், தங்கள் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது’ எனும் திருவெளிப்பாடு வசனம் நெற்றி குறித்த விவிலியப் பார்வையை விளக்குகிறது.
‘செயலற்ற நம்பிக்கை செத்த நம்பிக்கை’ என்பதே விவிலிய வாக்கு. இந்த தவக்காலம் வெறும் அடையாளங்களோடு முடிவதல்ல. தனது பாவங்களை உணர்ந்து மனம் திரும்புவது ஒரு நிலை. மனிதத்தின் கரம் பிடித்து இறைவனின் அன்பை பிறருக்கும் பகிர்ந்து கொடுப்பது உயர் நிலை.
அடையாளங்களை அறிந்து கொள்வோம், அன்பை அணிந்து கொள்வோம்.
சேவியர், சென்னை.
அதென்ன தவக்காலம்?
ஈஸ்டர் தினத்துக்கு முன்பு வருகின்ற, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்த, நாற்பது நாட்களைக் கிறிஸ்தவர்கள் ‘தவக்காலம்’ என அழைக்கின்றனர். அந்த தவ நாட்களின் தொடக்கம் ஒரு புதன் கிழமையில் ஆரம்பமாகும். அந்த நாள் தான் ‘சாம்பல் புதன்’. அதாவது தவத்தின் தொடக்கப் புள்ளி அந்த நாள் தான்.
‘லெந்து காலம்’ என்றும் ‘தவக்காலம்’ என்றும் அழைக்கப்படுகின்ற இந்த காலம் மனம் திரும்புதலின் காலம். தனது பாவங்களுக்குப் பலியாகத் தான் இறைமகன் இயேசு உயிர்விட்டார் எனும் சிந்தனையை மனதில் இருத்தி, தன் பாவ வாழ்க்கையை விட்டு மனம் திரும்பும் காலம்.
‘மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய்’ எனும் இறைவார்த்தையே தவக்காலத்தின் மையம். மண்ணிலிருந்து இறைவன் ஆதாமைப் படைத்தார். மனித குலம் அங்கிருந்து ஆரம்பமானது. மனிதனின் வாழ்க்கை இறுதியில் மண்ணோடு தான் கரைந்து முடிகிறது. எனில் ஆன்மா இறைவனோடு இளைப்பாற வேண்டும். அதற்கு நம் முடைய வாழ்க்கை இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கையாய் அமைய வேண்டும். இதுவே தவக்காலத்தின் அடிப்படைச் சிந்தனை.
அது ஏன் நாற்பது நாட்கள்?
நாற்பது என்பது விவிலியத்தில் மிக முக்கியமான எண். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் மக்களின் விடுதலை நாயகனாக இருந்தவர் மோசே. அவர், ஆரம்ப நாட்களில் எகிப்தியன் ஒருவனை அடித்துக் கொன்றார். அதன் பின் அந்த நாட்டை விட்டே பயந்து ஓடினார். மீதியானி எனுமிடத்தில் அவர் மறைந்து வாழ்ந்த ஆண்டுகள் நாற்பது.
பத்து கட்டளைகள் பழைய ஏற்பாட்டின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. இறைவன் அதை சீனாய் மலையில் வைத்து மோசேக்கு வழங்கினார். அதற்காக சீனாய் மலையிலே மோசே கடவுளோடு இருந்த நாட்கள் நாற்பது. எகிப்திலிருந்து அழைத்து வந்த இஸ்ரவேல் மக்கள் பாலை நிலைத்தில் அலைந்து திரிந்த வருடங்கள் நாற்பது. அந்த மோசே எழுதிய விடுதலைப்பயணம் பிற்காலத்தில் நாற்பது அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டதும் இறை சித்தமன்றி வேறில்லை. இறைமகன் இயேசு நேரடியாக உண்ணா நோன்பு இருந்து தந்தையாம் இறைவனோடு ஒன்றித்திருந்த நாட்கள் நாற்பது. இப்படி நாற்பது என்பதன் முக்கியத்துவம் விவிலியம் முழுவதும் தொடர்கிறது. அதுவே இந்த தவக்காலத்திலும் நீள்கிறது.
கி.பி. 900-ம் ஆண்டு முதல் இந்த சாம்பல் புதன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அது ஏன் சாம்பல்?
சாம்பல் என்பது எல்லோராலும் நிராகரிக்கப்படும் ஒரு பொருள். உதாசீனத்தின் அடையாளம். பழைய ஏற்பாட்டில் இறைவனிடம் மன்னிப்பு வேண்டும் மக்களும், மன்னர்களும் கோணியை ஆடையாய் உடுத்திக் கொண்டு, சாம்பலில் அமர்ந்து நோன்பு இருப்பார்கள். தங்கள் உடலெல்லாம் சாம்பல் பூசி, இறைவன் முன்னால் தாங்கள் வெறும் சாம்பல் போன்றவர்கள் என குறிப்பால் உணர்த்துவார்கள். தன்னை வெறுமையாக்கி, இறைவனை மட்டுமே மகிமைப்படுத்தும் நிகழ்வு அது.
அதன் அடிப்படையில் தவக்காலத்தின் தொடக்க நாளான புதன் கிழமையில் நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளம் இடும் வழக்கம் பெரும்பாலான கிறிஸ்தவர்களிடையே உண்டு. நெற்றியில் இடும் சிலுவை, வெற்றி தந்த இயேசுவின் சிலுவையை நினைவு கூரும் அடையாளம். இனி அவரது வாழ்க்கையை எனக்குள் சுமப்பேன் என்பதன் உறுதி மொழி.
ஏன் நோன்பு?
நோன்பு என்பது ஒறுத்தலின் அடையாளம். தியாகத்தின் வெளிப்பாடு. ஆடம்பரங்கள், சிற்றின்பங்கள் தவிர்த்து இறைவனோடு இணைந்திருப்பதே நோன்பின் அடிப்படை.
நோன்பு இருக்கும் போது பிறருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்றார் இயேசு. நோன்பு என்பது விளம்பரத்துக்கான விஷயமல்ல, அது இறைவனோடான தொடர்பின் அடையாளம். இந்த நோன்பை பெருமைக்காகவும், பெயருக்காகவும், கண் துடைப்புக்காகவும் செய்யாமல் உண்மை அன்போடு செய்ய வேண்டும்.
எதற்காக நெற்றியில்?
நெற்றி என்பது மனிதனுடைய முழுமையைக் குறிப்பதாக விவிலியம் கோடிட்டுக் காட்டு கிறது.
‘நிலத்தின் புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல், தங்கள் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது’ எனும் திருவெளிப்பாடு வசனம் நெற்றி குறித்த விவிலியப் பார்வையை விளக்குகிறது.
‘செயலற்ற நம்பிக்கை செத்த நம்பிக்கை’ என்பதே விவிலிய வாக்கு. இந்த தவக்காலம் வெறும் அடையாளங்களோடு முடிவதல்ல. தனது பாவங்களை உணர்ந்து மனம் திரும்புவது ஒரு நிலை. மனிதத்தின் கரம் பிடித்து இறைவனின் அன்பை பிறருக்கும் பகிர்ந்து கொடுப்பது உயர் நிலை.
அடையாளங்களை அறிந்து கொள்வோம், அன்பை அணிந்து கொள்வோம்.
சேவியர், சென்னை.