கிறித்தவம்
புனித சூசையப்பர் ஆலய தேர்த்திருவிழா
தேர் பவனியை அருட்தந்தை ஜார்ஜ் புனித நீரை கொண்டு மந்தரித்து தொடங்கி வைத்தார். இந்த தேர் பவனி பெரிய ஏரிக்கோடி கிராமங்கள் வழியாக வந்தது.
கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் உள்ள புனித சூசையப்பர் ஆலய தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட பூஜைகள் நிறைவேற்றப்பட்டன. நேற்று முன்தினம் இரவு புனித சூசையப்பர் ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது.
முன்னதாக, கோவை நல்லாயன் குருத்துவக்கல்லூரி பேராசிரியர் அந்தோணி மதலைமுத்து தலைமையில், ஆடம்பர கூட்டு திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், புனித சூசையப்பர் தேர்பவனி நடைபெற்றது.
தேர் பவனியை அருட்தந்தை ஜார்ஜ் புனித நீரை கொண்டு மந்தரித்து தொடங்கி வைத்தார். இந்த தேர் பவனி பெரிய ஏரிக்கோடி கிராமங்கள் வழியாக வந்தது. தேர்த்திருவிழாவில், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, தேரின் மீது உப்பு, மிளகு ஆகியவற்றை தூவினர்.
முன்னதாக, கோவை நல்லாயன் குருத்துவக்கல்லூரி பேராசிரியர் அந்தோணி மதலைமுத்து தலைமையில், ஆடம்பர கூட்டு திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், புனித சூசையப்பர் தேர்பவனி நடைபெற்றது.
தேர் பவனியை அருட்தந்தை ஜார்ஜ் புனித நீரை கொண்டு மந்தரித்து தொடங்கி வைத்தார். இந்த தேர் பவனி பெரிய ஏரிக்கோடி கிராமங்கள் வழியாக வந்தது. தேர்த்திருவிழாவில், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, தேரின் மீது உப்பு, மிளகு ஆகியவற்றை தூவினர்.