கிறித்தவம்
அருட்தந்தை லூர்து சேவியர் அடிகளார் நினைவு நாள்

அருட்தந்தை லூர்து சேவியர் அடிகளார் நினைவு நாள்

Published On 2022-04-19 03:24 GMT   |   Update On 2022-04-19 03:24 GMT
அருட்தந்தை லூர்து சேவியர் அடிகளார் நினைவு நாளை முன்னிட்டு பூண்டி மாதா பேராலயத்தில் உள்ள அவரது கல்லறை முன்பு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பூண்டி மாதா பேராலயத்தில் 1955-ம் ஆண்டு முதல் 1972 ஆண்டு வரை பங்கு தந்தையாக பணியாற்றியவர் லூர்து சேவியர் அடிகளார். பூண்டி மாதாவின் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டு இருந்த லூர்து சேவியர் அடிகளார் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

லூர்து சேவியர் உடல் பூண்டி மாதா பேராலயத்தின் உள்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு பேராலயத்திற்கு வரும் பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. பல்வேறு அற்புதங்கள் செய்ததால் லூர்து சேவியர் அடிகளார் புனிதர் பட்டம் பெறும் நிலை உள்ளது.

அருட்தந்தை லூர்து சேவியர் அடிகளார் நினைவு நாளை முன்னிட்டு பூண்டி மாதா பேராலயத்தில் உள்ள அவரது கல்லறை முன்பு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் மற்றும் பொருளாளர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் சாம்சன், உதவி பங்குத்தந்தை யர்கள் ஜான்சன், இனிகோ, ஆன்மிக தந்தை அருளாநந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News