கிறித்தவம்
புனித காணிக்கை அன்னை

பாபநாசம் அருகே புனித காணிக்கை மாதா தேர் திருவிழா

Published On 2022-02-03 09:38 IST   |   Update On 2022-02-03 09:38:00 IST
பாபநாசம் புனித காணிக்கை மாதா ஆலயத்தின் மின் அலங்கார தேர்பவனி வாணவேடிக்கையுடன் விடியவிடிய நடந்தது. இதையடுத்து திருப்பலியுடன் கொடி இறக்கப்பட்டது.
பாபநாசம் அருகே ராஜகிரி பண்டாரவாடை மாதா கோவில் தெருவில் புனித காணிக்கை மாதா ஆலயம் உள்ளது. இங்கு தேர் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக மறைவட்ட முதல்வர் தேவதாஸ் தலைமையில் கொடியேற்றப்பட்டது.

பின்னர் புதுப்பிக்கப்பட்ட புதிய ஜெபி மாதா கோவில் திறக்கப்பட்டது. பாடல் குழுவினருடன் திருப்பலியும் நடைபெற்றது. விழாவில் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தின் பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ், முன்னாள் பங்குத்தந்தை பிரான்சிஸ், கும்பகோணம் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர் விக்டர், பாடலூர் பங்குத்தந்தை மார்செலின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதையடுத்து மின் அலங்கார தேர்பவனி வாணவேடிக்கையுடன் விடியவிடிய நடந்தது. இதையடுத்து திருப்பலியுடன் கொடி இறக்கப்பட்டது.

Similar News