கிறித்தவம்
சத்திரப்பட்டி குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சத்திரப்பட்டி குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-01-10 03:34 GMT   |   Update On 2022-01-10 03:34 GMT
கயத்தாறு சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் திருப்பலி, ஜெப வழிபாடுகள் நடைபெறும்.
கயத்தாறு அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குதந்தை வின்சென்ட் அடிகளார் தலைமையில் திருப்பலி, நற்கருணை சிறப்பு வழிபாடுகளுடன் இறை மக்கள் வழிபாடு செய்து ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து பின்னர் ஜெப வழிபாடு செய்து கொடியேற்றினார்.

இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் திருப்பலி, ஜெப வழிபாடுகள் நடைபெறும். 10-ம் நாளில் சப்பர பவனி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தலையால்நடந்தான் குளம் திருக்குடும்ப சபை குருக்கள், கயத்தாறு அமலவை கன்னியர்கள் மற்றும் இறை மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News