ஆன்மிகம்
புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் அலங்கார தேர்பவனி

கும்பகோணம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் அலங்கார தேர்பவனி

Published On 2021-07-26 04:57 GMT   |   Update On 2021-07-26 04:57 GMT
கும்பகோணம் புனித பெரியநாயகி அன்னையின் அலங்கார தேர் பவனி பங்குத்தந்தை பெர்னாண்டஸ் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் பெருமாண்டி மாதா கோவில் தெருவில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 101-வது ஆண்டு திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் ஜெபமாலை திருவிழா, கூட்டு திருப்பலி ஆகியவை நடந்தது. கூட்டு திருப்பலியை உதவி பங்குத்தந்தை பால்தினகரன் தொடங்கி வைத்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அன்னையின் அலங்கார தேர்பவனி பங்குத்தந்தை பெர்னாண்டஸ் தலைமையில் நடந்தது.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News