ஆன்மிகம்
எலத்தகிரியில் பாறை கோவில் திருவிழாவில் தேர் பவனி

எலத்தகிரியில் பாறை கோவில் திருவிழாவில் தேர் பவனி

Published On 2021-02-09 04:08 GMT   |   Update On 2021-02-09 04:08 GMT
கந்திகுப்பம் அருகே உள்ள எலத்தகிரியில் 117-ம் ஆண்டு பாறை கோவில் திருவிழா ஆடம்பர தேர் பவனி மற்றும் வாணவேடிக்கையுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
கந்திகுப்பம் அருகே உள்ள எலத்தகிரியில் 117-ம் ஆண்டு பாறை கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி கடந்த 31-ந் தேதி கொடியேற்றம் மற்றும் நவநாள் திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து தினமும் இரவு நேரங்களில் பூண்டி மாதா தேர்பவனி, புனித அந்தோணியார் தேர் பவனி, புனித சூசையப்பர் தேர் பவனி, குழந்தை இயேசு தேர்பவனி, பெரியநாயகி மாதா தேர்பவனி, வேளாங்கண்ணி மாதா தேர்பவனி ஆகியவை நடைபெற்றது.

நேற்று முன்தினம் ஆடம்பர தேர் பவனி மற்றும் வாணவேடிக்கையுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News