ஆன்மிகம்
இலவுவிளை தூய ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

இலவுவிளை தூய ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2021-01-08 04:42 GMT   |   Update On 2021-01-08 04:42 GMT
புதுக்கடை அருகே இலவுவிளை தூய ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
புதுக்கடை அருகே இலவுவிளை தூய ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது. விழாவில் அருட்பணியாளர் ஜாண் மைக்கிள்ராஜ் தலைமை தாங்குகிறார். தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

வருகிற 16-ந் தேதி நடைபெறும் திருப்பலியில் வேங்கோடு பங்குதந்தை ஆன்டனி கோமஸ் தலைமை தாங்குகிறார். திருவிழாவின் இறுதி நாளான 17-ந் தேதி காலை 8.30 மணிக்கு வளனூர் பங்குதந்தை காட்வின் செல்வ ஜஸ்டஸ் தலைைமயில் திருவிழா திருப்பலியும், தொடர்ந்து 11 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது. மாலையில் பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஆண்டனி ஜெயக்கொடி தலைைமயில் பங்குமக்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News