ஆன்மிகம்
ஆரோக்கிய மாதா

அற்புத ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2019-08-30 03:27 GMT   |   Update On 2019-08-30 03:27 GMT
சேலம் சாமிநாதபுரம் பகுதியில் அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சேலம் சாமிநாதபுரம் பகுதியில் அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவுக்கு சேலம் மறைவட்ட முதன்மை குரு அருளப்பன் தலைமை தாங்கினார்.

பின்னர், அவர் ஆலயத்தின் முன்பு திருக்கொடியை ஏற்றி வைத்து பெருவிழாவை தொடங்கி வைத்தார். சேலம் குழந்தை ஏசு பேராலயத்தின் பங்கு தந்தை ஜான் ஜோசப் முன்னிலை வகித்தார். இதையடுத்து நவநாள் திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு மற்றும் பங்கு ஆலோசனைக்குழுவினர் செய்திருந்தனர்.

திருவிழாவை முன்னிட்டு வருகிற 7-ந் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு சிறு தேர்பவனி ஊர்வலம் மற்றும் நவநாள் திருப்பலியும், 8-ந் தேதி மாலை 6 மணிக்கு கூட்டு திருப்பலி மற்றும் அன்னையின் ஆடம்பர தேர்பவனியும், 9-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நன்றி திருப்பலி மற்றும் கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
Tags:    

Similar News