ஆன்மிகம்
கோட்டப்பாளையத்தில் உள்ள புனித மகதலா மரியா ஆலய தேர்பவனி நடைபெற்றது. திருவிழாவில் மத பாகுபாடின்றி மக்கள் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர்.
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையத்தில் பழமை வாய்ந்த புனித மகதலா மரியா ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் 16-ம் நூற்றாண்டில் சிறிய வழிபாட்டு தலமாக அமைக்கப்பட்டு, பின்னர் 18-ம் நூற்றாண்டில் வீரமா முனிவரால் மேம்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி திருப்பலிகள், மறையுரை உள்ளிட்டவை நடந்தன. 2 நாட்களுக்கு முன்பு இரவில் 7 சப்பரங்களில் ஏசு உலா வந்தார். இதையொட்டி வாண வேடிக்கை நடந்தது. நேற்று முன்தினம் மதியம் ஏசுவின் சொரூபம் அலங்கரிக்கப்பட்டு, தேரில் வைக்கப்பட்டது. இதையடுத்து தேர்பவனி நடந்தது. இத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.
திருவிழாவில் மத பாகுபாடின்றி மக்கள் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர். திருவிழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி திருப்பலிகள், மறையுரை உள்ளிட்டவை நடந்தன. 2 நாட்களுக்கு முன்பு இரவில் 7 சப்பரங்களில் ஏசு உலா வந்தார். இதையொட்டி வாண வேடிக்கை நடந்தது. நேற்று முன்தினம் மதியம் ஏசுவின் சொரூபம் அலங்கரிக்கப்பட்டு, தேரில் வைக்கப்பட்டது. இதையடுத்து தேர்பவனி நடந்தது. இத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.
திருவிழாவில் மத பாகுபாடின்றி மக்கள் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர். திருவிழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.