ஆன்மிகம்
புனித சந்தியாகப்பர் திருத்தல பெருவிழா தொடங்கியது

புனித சந்தியாகப்பர் திருத்தல பெருவிழா தொடங்கியது

Published On 2019-07-17 05:22 GMT   |   Update On 2019-07-17 05:22 GMT
திருச்சி புனித சந்தியாகப்பர் திருத்தலத்தின் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சி மறைமாவட்ட தொடர்பாளர் டி.யூஜின் திருப்பலிக்கு தலைமை தாங்கி, ஜெபம் செய்து கொடியேற்றி வைத்தார்.
திருச்சி பெரியமிளகு பாறையில் அரசு மருத்துவ கல்லூரி அருகில் புனித சந்தியாகப்பர் திருத்தலம் உள்ளது. புனித சந்தியாகப்பர் திருத்தலத்தின் 43-ம் ஆண்டு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சி மறைமாவட்ட தொடர்பாளர் டி.யூஜின் திருப்பலிக்கு தலைமை தாங்கி, ஜெபம் செய்து கொடியேற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருத்தல பங்கு தந்தை ஏ.வின்சென்ட் ஜோசப், திருச்சி தமிழ் இலக்கிய கழக அருட்தந்தை ஜோசப் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி பாடல், மறையுரை நடந்தது. விழா வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. நவநாட்களில் தினமும் மாலை 6.15 மணிக்கு ஜெபமாலையும், நவநாள் ஜெபமும், பாடல் திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடக்கிறது.முக்கிய விழாவான தேர்பவனி, வருகிற 25-ந் தேதி மாலை 6.15 மணிக்கு நடக்கிறது. அன்றைய தினம் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி, திருச்சி மறைமாவட்ட பொருளாளர் அருட்தந்தை இன்னாசிமுத்து உள்ளிட்ட இறைமக்கள் கலந்துகொள்கிறார்கள்.
Tags:    

Similar News