ஆன்மிகம்
சுப்ரமணியபுரம் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
சுப்ரமணியபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி சுப்ரமணியபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாலை சிறப்பு திருப்பலி நடந்து வருகிறது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது.
ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்த பின் தேர்பவனி நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. தேர் சுப்ரமணியபுரம் வீதிகளை சுற்றி ஆலயத்தை வந்தடைந்தது. இதில் கிறிஸ்தவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்த பின் தேர்பவனி நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. தேர் சுப்ரமணியபுரம் வீதிகளை சுற்றி ஆலயத்தை வந்தடைந்தது. இதில் கிறிஸ்தவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.