ஆன்மிகம்
ஆட்டுப்பட்டி அந்தோணியார் ஆலய தேர்பவனி
புதுச்சேரி ஆட்டுப்பட்டி புனித பதுவை அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி ஆட்டுப்பட்டி புனித பதுவை அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 10-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் மாலை திருப்பலியும் தொடர்ந்து சிறிய தேர்பவனியும் நடந்தது.
விழாவில் நேற்று காலை 6.30 மணிக்கு அந்தோணி ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மாலை 5.30 மணிக்கு புதுவை - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா திருப்பலியும் தொடர்ந்து ஆடம்பர தேர்பவனியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் நேற்று காலை 6.30 மணிக்கு அந்தோணி ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மாலை 5.30 மணிக்கு புதுவை - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா திருப்பலியும் தொடர்ந்து ஆடம்பர தேர்பவனியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.