ஆன்மிகம்

ஆட்டுப்பட்டி அந்தோணியார் ஆலய தேர்பவனி

Published On 2019-06-14 04:01 GMT   |   Update On 2019-06-14 04:01 GMT
புதுச்சேரி ஆட்டுப்பட்டி புனித பதுவை அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி ஆட்டுப்பட்டி புனித பதுவை அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 10-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் மாலை திருப்பலியும் தொடர்ந்து சிறிய தேர்பவனியும் நடந்தது.

விழாவில் நேற்று காலை 6.30 மணிக்கு அந்தோணி ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மாலை 5.30 மணிக்கு புதுவை - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா திருப்பலியும் தொடர்ந்து ஆடம்பர தேர்பவனியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News