ஆன்மிகம்
திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் கோவில்தெருவில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது.
திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் கோவில்தெருவில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை திருவிழா திருப்பலி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து புனித சவேரியாரின் அலங்கார தேர்பவனி அன்று இரவு நடைபெற்றது. கே.என்.நேரு எம்.எல்.ஏ. தேர்பவனியை தொடங்கி வைத்தார்.
ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனி பட்டாபிராமன்சாலை, அரசு மருத்துவமனை, புத்தூர் நால்ரோடு வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் சவேரியார் கோவில்தெரு நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் திரளாக கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து புனித சவேரியாரின் அலங்கார தேர்பவனி அன்று இரவு நடைபெற்றது. கே.என்.நேரு எம்.எல்.ஏ. தேர்பவனியை தொடங்கி வைத்தார்.
ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனி பட்டாபிராமன்சாலை, அரசு மருத்துவமனை, புத்தூர் நால்ரோடு வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் சவேரியார் கோவில்தெரு நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் திரளாக கலந்து கொண்டனர்.