ஆன்மிகம்

அழகப்பபுரம் அருகே புனித சவேரியார் ஆலய திருவிழா

Published On 2018-11-30 03:54 GMT   |   Update On 2018-11-30 03:54 GMT
அழகப்பபுரம் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ந்தேதி சிறப்பு மாலை ஆராதனையும், 4-ந்தேதி கூட்டு திருப்பலியும் நடக்கிறது.
அழகப்பபுரம் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி ஆகியவை நடந்தது. விழாவில் 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் வின்சென்ட் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், 4-ந்தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் வசந்தன் தலைமையில் கூட்டு திருப்பலியும் நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குதந்தை ராயப்பன், பங்கு பேரவையினர் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News