ஆன்மிகம்

கொடைக்கானல் பாக்கியபுரம் ஆரோக்கிய அன்னை தேர் பவனி

Published On 2018-09-10 05:19 GMT   |   Update On 2018-09-10 05:19 GMT
கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியில் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியில் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இதன் 33-ம் ஆண்டு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி சிறப்பு திருப்பலிகள், மறையுரைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு திருப்பலியுடன் தங்கமகுடம் சூட்டும் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலையில் திருவிழா திருப்பலி நிறைவடைந்தவுடன் மின்அலங்கார தேர் பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நாயுடுபுரம் கன்னியர் இல்லத்தை அடைந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று பகல் சப்பர பவனி கன்னியர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு மாலையில் ஆலயத்தை அடைந்தது. அங்கு நன்றித் திருப்பலியுடன் கொடி இறக்கம் நடைபெற்றது.

திருவிழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அடைக்கலராஜா, அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், பக்த சபையினர், அன்பியங்கள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்து இருந்தனர். 
Tags:    

Similar News