ஆன்மிகம்

புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2018-05-04 08:56 IST   |   Update On 2018-05-04 08:56:00 IST
பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. வீரமாமுனிவர் வழிபட்ட பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் இரவு புனித அந்தோணியார் தேர்பவனி வான வேடிக்கைகளுடன் நடைபெறுகிறது.

இதையொட்டி இன்னிசை கச்சேரி, கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தோணியார் திருத்தல பங்கு தந்தை ஏ.கிறிஸ்து அமலதாஸ், வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர். 

Similar News