ஆன்மிகம்

புனித லூர்து அன்னை ஆலய தேர்பவனி

Published On 2018-02-12 08:37 IST   |   Update On 2018-02-12 08:37:00 IST
திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் புனித லூர்து அன்னை ஆலய விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேர்பவனி நடைபெற்றது.
திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய 122-ம் ஆண்டு திருவிழா கடந்த 2-ந்தேதி மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வெரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று இரவு தேர்பவனி நடைபெற்றது.

முன்னதாக மாலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மெயின்கார்டுகேட் நுழைவு வாயில் வழியாக என்.எஸ்.பி ரோட்டில் சென்று தெப்பக்குளம் வழியாக நந்திகோவில், காளியம்மன் கோவில் தெரு, சத்திரம் பஸ் நிலையம் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து இரவு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதற்காக கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் பெரியைய்யா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Similar News