ஆன்மிகம்
தூய சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சேதுக்குவாய்த்தான் தூய சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சேதுக்குவாய்த்தான் தூய சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நற்கருணை ஆசீர் நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் திருப்பலி, நற்கருணை ஆசீர் நடக்கிறது.
9-ம் திருநாளான வருகிற 27-ந்தேதி மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. 10-ம் திருநாளான 28-ந்தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா திருப்பலி, புதுநன்மை, உறுதிப்பூசுதல் வழங்குதல் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. 29-ந்தேதி மதியம் அசன விருந்து நடக்கிறது.