ஆன்மிகம்
பரிசுத்த திருக்குடும்ப ஆலய தேர் பவனி
ராமன்புதூர் கார்மல் நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய 10-ம் நாள் திருவிழாவையொட்டி காலையில் சிறப்பு ஆடம்பர திருப்பலி நடந்தது.
ராமன்புதூர் கார்மல்நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து கோட்டார் மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடைபெற்றன.
10-ம் நாள் திருவிழாவையொட்டி காலையில் சிறப்பு ஆடம்பர திருப்பலி நடந்தது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்துகொண்டு மறையுரை ஆற்றினார்.
பிற்பகல் ஆலய வளாகத்தில் இருந்து தேர்பவனி தொடங்கியது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இரவு ஆலய வளாகத்தை சென்றடைந்தது. முன்னதாக தேர் ராமன்புதூர் சந்திப்பு வந்தபோது பரிசுத்த திருக்குடும்ப ஆலய அறக்கட்டளை ஊர் தலைவர் அந்தோணிமுத்து, செயலாளர் வாலன்டின் பிரிட்டோ, பொருளாளர் ராபி ரோசாரியோ ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பரிசுத்த திருக்குடும்ப ஆலய அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பங்குமக்கள் செய்திருந்தனர்.