ஆன்மிகம்

மணலி புதுநகர் குழந்தை ஏசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2018-01-01 08:47 IST   |   Update On 2018-01-01 08:47:00 IST
மணலி புதுநகர் அற்புத குழந்தை ஏசு ஆலய திருவிழா கொடியேற்றத்தை மயிலை உயர் மறைமாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி தொடங்கி வைத்தார்.
மணலி புதுநகர் அற்புத குழந்தை ஏசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலை உயர் மறைமாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

வருகிற 7-ந்தேதி வரை நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வாக 6-ந்தேதி குழந்தை ஏசு திருஉருவ சிலையை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து மணலி புதுநகர் பகுதிகளில் வலம் வருதலும், 7-ந்தேதி காலை முதல் மாலை வரைஆசீர்வாத பெருவிழாவும் நடைபெறுகின்றது. அன்று மாலை கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைகின்றது.

Similar News