ஆன்மிகம்

வீரக்குறிச்சி - சுக்கிரன்பட்டி அந்தோணியார் ஆலய தேர்பவனி

Published On 2017-05-27 04:01 GMT   |   Update On 2017-05-27 04:01 GMT
பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது.
பட்டுக்கோட்டை அருகே உள்ள வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இது வீரமாமுனிவர் வழிபட்ட ஆலயமாகும். இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது.

இதில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை ஏ.கிறிஸ்து அமலதாஸ் மற்றும் வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டி பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News