கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருச்சி அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்

Published On 2022-06-24 15:38 GMT   |   Update On 2022-06-24 15:38 GMT
  • அதிரடியாக ஆடிய மோனிஷ் 24 ரன்களும், விக்னேஷ் 32 ரன்களும் சேர்க்க திண்டுக்கல் அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது.
  • திருச்சி அணி தரப்பில் அஜய் கிருஷ்ணா 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் நெல்லையில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணியின் துவக்க வீரர் பிரதீப் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் கேப்டன் ஹரி நிஷாந்த்- மணி பாரதி ஜோடி சற்று தாக்குப்பிடித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் நிஷாந்த் 25 ரன்களும், மணி பாரதி 18 ரன்களும் சேர்த்தனர். விஷால் வைத்யா 16 ரன்களில் வெளியேறினார். மோகித் ஹரிஹரன் (8), ராஜேந்திரன் விவேக் (6) ஆகியோர் ஒற்றை இலக்கை ரன்னை தாண்டவில்லை.

கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய மோனிஷ் 24 ரன்களும், விக்னேஷ் 32 ரன்களும் சேர்க்க அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து சிலம்பரசன் 2 ரன்கள், மனோஜ் குமார் 1 ரன் எடுக்க, 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. திருச்சி அணி தரப்பில் அஜய் கிருஷ்ணா 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். ரகில் ஷா தலா 2 விக்கெட், சரவணகுமார், யாஸ் அருண் மொழி, அந்தோணி தாஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News