கிரிக்கெட்
null
முதல் டெஸ்ட் போட்டி: டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு- சூர்யகுமார் யாதவ் அறிமுகம்
- பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது.
- இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ் மற்றும் பரத் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகின்றனர்.
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று தொடங்கியது. இன்று காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்கவுள்ள நிலையில், டாஸ் போடப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ் மற்றும் பரத் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகின்றனர்.