கிரிக்கெட்

ஏஞ்சலோ மேத்யூஸ்

இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூசுக்கு கொரோனா

Published On 2022-07-01 10:05 GMT   |   Update On 2022-07-01 10:05 GMT
  • முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
  • இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.

இலங்கை அணி ஆஸ்திரேலியாவுடன் மூன்று வடிவிலான தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா அணியும் ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் முதல் டெஸ்டில் விளையாடிய இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு பதிலாக பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டார். இரண்டாவது இன்னிங்சில் பெர்னாண்டோ 12 மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News