கிரிக்கெட்

அரை சதமடித்த சுரேஷ்குமார்

சுரேஷ்குமார் அதிரடி - நெல்லை அணி வெற்றி பெற 178 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை அணி

Published On 2022-07-23 15:26 GMT   |   Update On 2022-07-23 15:26 GMT
  • டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
  • முதலில் ஆடிய கோவை அணி 177 ரன்களை எடுத்தது.

சேலம்:

6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

இன்று நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் கோவை, நெல்லை அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜு 48 ரன்னில் அவுட்டாகி அரை சதத்தை நழுவவிட்டார்.

விக்கெட் கீப்பர் சுரேஷ்குமார் அதிரடியாக ஆடி 48 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 75 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாருக் கான் 3 ரன்னில் வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 18 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 178 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News