கிரிக்கெட்

டெல்லி கேப்பிட்டல்ஸ்க்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சு

Published On 2024-04-24 13:39 GMT   |   Update On 2024-04-24 13:39 GMT
  • இந்த போட்டி சுப்மன் கில்லுக்கு 100-வது போட்டியாகும்.
  • டாஸ் தோற்றது நல்லதுதான் எனத் தெரிவித்துள்ளார் ரிஷப் பண்ட்.

டெல்லியில் இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி மைதானத்தில் நடைபெறும் 2-வது போட்டி இதுவாகும்.

இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி சுப்மன் கில்லுக்கு 100-வது ஐபிஎல் போட்டியாகும்.

டாஸ் தோற்றது குறித்து ரிஷப் பண்ட் கூறுகையில் "டாஸ் தோற்றது நல்லதுதான். நாங்கள் முதலில்தான் பேட்டிங் செய்ய விரும்பினோம்" என்றார்.

டாஸ் வென்ற சுப்மன் கில் "இது சிறந்த ஆடுகளம் போன்று தெரிகிறது. நாங்கள் கடந்த இரண்டு போட்டிகளில் சிறந்த வகையில் சேஸிங் செய்தோம்" என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News