கிரிக்கெட்
null

2-வது அரையிறுதி: இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு- ரிஷப் பண்டுக்கு அணியில் இடம்

Published On 2022-11-10 07:36 GMT   |   Update On 2022-11-10 08:23 GMT
  • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
  • ரிஷப் பண்டுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது.

அடிலெய்டு:

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இன்று அடிலெய்டில் 2-வது அரைஇறுதியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியில் தினேஷ் கார்த்திகா அல்லது ரிஷப் பண்டா என்ற நிலையில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 

Tags:    

Similar News