கிரிக்கெட்

கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை நியமித்தது பிசிசிஐ

Published On 2022-12-01 12:12 GMT   |   Update On 2022-12-01 12:12 GMT
  • இந்த குழு புதிய தேர்வுக்குழுவை தேர்வு செய்யும்.
  • அதில் முன்னாள் வீரர்கள் அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ ) தனது கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை (சிஏசி) நியமித்துள்ளது. அதில் முன்னாள் வீரர்கள் அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு புதிய தேர்வுக்குழுவை தேர்வு செய்யும். கடந்த மாதம் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அரையிறுதி தோல்விக்குப் பிறகு சேத்தன் சர்மா தலைமையிலான முழு தேர்வுக் குழுவையும் பிசிசிஐ நீக்கியது.

Tags:    

Similar News