சினிமா
பாலா அரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் நிஷாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் முன்னோட்டம்.
பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவையோடு ஜனரஞ்சகமாக தற்கால சூழலுக்கு ஏற்ற வகையில் படமாக்கி இருப்பதாக இயக்குனர் பாலா அரன் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர்.
இப்படத்திற்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேன் விகாஷ் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராம்-சதீஷ் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் எடிட்டிங்கில் ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஓம் பிலிம்ஸ் மற்றும் ஸ்ரீ பிலிம்ஸ் வெளியிடுகிறது. இத்திரைப்படத்தின் கதைக்களம் தமிழ் திரையுலகில் அரிதான புதையல் வேட்டையை மையமாக கொண்டது.