சினிமா

கோம்பே

Published On 2017-02-16 04:23 GMT   |   Update On 2017-02-16 04:23 GMT
காசுக்காக எதையும் செய்யத் துணியும் ஒரு இளைஞனைப் பற்றிய படமாக உருவாகி வரும் "கோம்பே" படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
தேங்காயில் இருந்து தேங்காயையும் நீரையும் எடுத்த பின் கீழே போடப்படும் கூட்டைத்தான் கோம்பே என்பார்கள். மனித  வாழ்க்கையையும் அப்படித்தான் இருக்கிறது. மனித உடலில் உயிர் இல்லை எனில் அதற்கு எந்த மரியாதையையும் இல்லை இது  தான் இந்தப் படத்தின் அடி நாதம்.

தேனியில் வாழும் ஒரு இளைஞன், காசுக்காக எதையும் செய்யத் துணிபவன், அவனது வாழ்க்கையை சொல்கிற படம்தான்   "கோம்பே"

காசுக்காக கொலைகூட செய்பவனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவன் வாழ்வில் வசந்தம் வீசுகிறது. அவள்  அவன் வாழ்வை மாற்ற முயல்கிறாள் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்தப்படம்.

முழுக்க புதுமுகங்களால் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ஹீரோவாக "சார்லஸ்" ஹிரோயினாக "தீர்த்தா"  நடித்திருக்கிறாரகள்.

கதை, ஒளிப்பதிவு, DI, எடிட்டிங், ஆகிய பணிகளுடன் இந்தப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் ஹாபிஸ்இஸ்மாயில்.   மேலும் இப்படத்தில் வில்லனாகவும்  நடித்துள்ளார்.

சினிமாவில் அனைத்து வேலைகளை செய்யும் இவர் மலையாளத்தில் ஏற்கனவே மூன்று படங்களை இயக்கியிருக்கிறார்.

தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. படத்தின் கதை 4 நாட்களில் நடப்பதாக  கதை அமைக்கப்பட்டுள்ளது.

புதுமுகம் அனூப் ராக்வெல், அபிஜித் ஜான்சன், டென்னிஸ்ஜோசப் ஆகிய மூவரும்  இந்தப்படத்தில் இசையமைத்திருக்கிறார்கள்.  ஹரிஸ் இஸ்மாயில் மற்றும் பினு ஆப்ரகாமுடன் இணைந்து ஹாபிஸ் இஸ்மாயில் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

Similar News