சினிமா

கனவு வாரியம்

Published On 2017-01-27 08:28 GMT   |   Update On 2017-01-27 08:28 GMT
வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படமான 'கனவு வாரியம்' படத்தின் முன்னோட்டத்தை பார்க்கலாம்.
தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்டு டிசிகாப் சினிமாஸ் தயாரிப்பில் உருவான ஜனரஞ்சகமான  திரைப்படம் 'கனவு வாரியம்', திரைக்கு வரும்  முன்பே 7 சர்வதேச விருதுகளையும், 9 நாடுகளில் இருந்து 15 சர்வதேச  அங்கீகாரங்களையும், கௌரவங்களையும் வென்றுள்ளது. உலகப் புகழ்ப் பெற்ற 2 சர்வதேச 'ரெமி' விருதுகளை வென்ற முதல்  இந்தியத் திரைப்படம் 'கனவு வாரியம்'.

இந்தியா முழுவதும் வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் 'கனவு வாரியம்' என்பது  குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அருண்சிதம்பரம் 'கனவு வாரியம்' திரைப்படத்திற்குகதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதி, இயக்கி  கதாநாயகனாகவும் நடித்து உள்ளார்.  அருண் சிதம்பரம் மறைந்த மக்களின் ஜனாதிபதி மேதகு அப்துல்கலாம் அவர்களால்  பெரிதும் பாராட்டப்பெற்றவர்.

'கனவு வாரியம்' திரைப்படத்தில் ஜியா (அறிமுக கதாநாயகி), இளவரசு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பிளாக் பாண்டி, யோக்  ஜெப்பி, செந்தி குமாரி உட்பட பலர்நடித்துள்ளனர். இசை - ஷியாம் பெஞ்சமின், ஒளிப்பதிவு - எஸ்.செல்வகுமார், படத்தொகுப்பு –  காகின்.

'ஆணழகன்'  டாக்டர் அ.சிதம்பரம்  மற்றும் கார்த்திக் சிதம்பரம் அவர்களும் இணைந்து 'டிசிகாப் சினிமாஸ்' பேனரில் 'கனவு  வாரியம்' திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

Similar News