சினிமா

சோக்காலி மைனர்

Published On 2017-01-19 08:23 GMT   |   Update On 2017-01-19 08:23 GMT
நாகார்ஜுனா கலக்கும் ‘சோக்காலி மைனர்’ படத்தின் முன்னோட்டம் குறித்து கீழே பார்க்கலாம்.
தேவிபரணிகா வழங்கும் ஓம்கார பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘சோக்காலி மைனர்’. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்று இப்போது தமிழில் வரும் இந்த படத்தில் நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அவருடன் ரம்யாகிருஷ்ணன், அனுஷ்கா, லாவண்யா திரிபாதி, நாசர், பிரமானந்தம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இது நகைச்சுவை கதையம்சம் கொண்ட படம். உல்லாச வாழ்க்கையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு நாகார்ஜுன் சீக்கிரமே எமலோகம் செல்கிறார். அங்கு உள்ள பெண்களையும் மயக்கி தன் வசமாக்குகிறார். இதனால் எமதர்மனுக்கு பெரும் தொல்லையாகிறது.

எனவே, நாகார்ஜுனாவை எமலோகத்தில் இருந்து எப்படியாவது அனுப்பி விட எமர்தமன் முடிவு செய்கிறார். பூலோகத்தில் உள்ள மனைவி அவரை அழைப்பதாகவும் கூறுகிறார். இதை கேட்ட நாகார்ஜுனா, “ஐயோ... நான் போக மாட்டேன்.. போனால் மனைவி என்னை, அடித்து உதைத்து துவைத்து விடுவாள்” என்று அடம் பிடிக்கிறார்.

இதனால் எமதர்மன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி தவிக்கிறார். அடுத்து என்ன நடக்கும்? என்பது மீதி கதை. இது போன்ற கலகலப்பான காட்சிகள் கொண்ட படம் ‘சோக்காலி மைனர்’ என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

ஒளிப்பதிவு- பி.எஸ்.வினோத், ஆர்.சித்தார்த், இசை- அனுரூபன்ஸ், ஜான்பீட்டர், பாடல்கள்- குமார் கணேஷ், வசனம்- மைக்கேல் யாகப்பன், நடனம்-ராஜீவ் சுந்தரம், பாபாபாஸ்கர், நிக்ஸன், தயாரிப்பு- கெளபாய் எம்.நிரஞ்சன்குமார் யாதவ், இயக்கம் - கல்யாண கிருஷ்ண குருசாலா.

Similar News